states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மாநில அரசுகள் நிதிரீதியாக பலமிழக்க ஒன்றிய அரசு சதி செய்வ தாகவும் தெலங்கானா வை ஒன்றிய அரசு பார பட்சத்துடன் நடத்துவ தாகவும் அம்மாநில முதல்வர்  கே.சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டியுள் ளார்.

கர்நாடக மாநிலம் பிதார்-ஸ்ரீரங்கப்பட்டணா நெடுஞ்சாலையில் கல்புர்கி மாவட்டத்தில் ஹைதராபாத் நோக்கிச் சென்ற பேருந்து தீப்பிடித் ததில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழ ந்தவர்கள் அனைவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று  தகவல்கள் தெரிவிக்கின் றன. 

பாகிஸ்தானில் பெட்ரோ லியப் பொருட்களின் விலையை பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலை மையிலான அரசு உயர் த்தியதைக் கண்டித்து கராச்சியின் மத்திய மாவட்டத்தில் உள்ள பூரனி சப்ஜி மண்டி அரு கே உள்ள பெட்ரோல் பங்க் மீது பொதுமக்கள் பயங்கர தாக்குதல் நடத் தினர்.  நாகன் சௌரங்கி யிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

காஷ்மீரில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் தங்களை சொந்த மாவட் டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யவேண் டும் என வலியுறுத்தி ஜம்மு-வில் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

விசா முறைகேடு வழக் கில் கார்த்தி சிதம்பரத் தின் முன்ஜாமீன் மனு உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் தள்ளு படி செய்வதாக தில்லி சிபிஐ சிறப்பு நீதி மன்றம் அறிவித்துள்ளது. இத னால் கார்த்தி சிதம்ப ரத்தை தற்போது கைது செய்வதற்கு எவ்வித தடையும் அமலாக்கத் துறைக்கு இல்லை. இதனையடுத்து விசார ணையை துரிதப்படுத்து வதற்கு அமலாக்கத்து றை முடிவு செய்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியின் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் நிரந்தர கட்டுமானங்கள், சுரங் கம் தோண்டுவதற்கு தடை விதித்தும், இப்பகு திகளில் உள்ள கட்டு மானங்கள் குறித்த பட்டி யலை தயாரித்து, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் போது அனுமதித்ததை விட கூடுதல் லக்கேஜ்  எடுத்துச் செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண் டும் என்றும் தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய கட்டுப்பாடுகளை இந்திய ரயில்வே அறி வித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆசியா வின் மிகப்பெரிய முதல் இரண்டு பணக்காரர் களின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 99.07 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அதானியின் சொத்து மதிப்பு 98.7 பில்லியன் டாலர்களாக உள்ளது.