சென்னை, ஏப்.23- குழந்தைகளின் பொழுதுபோக்கான தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்க இணையவழியிலான கோடைகால முகாமிற்கு சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் ஏற்பாடு செய்துள்ளது. அடுத்த மாதம் 2ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை காலை 10.30 மணி முதல் 12.45 மணி வரை 5 பிரிவுகளில் முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொள்வதற்கு முன்னதாக இம்மாதம் 25-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இது தற்போது இம்மாதம் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள 8 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 250 ரூபாய் பதிவு கட்டண மாக செலுத்தி இதில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு கட்டணத்தை காசோலை யாகவோ, வரைவோலையாகவோ தலைமை தபால் அதிகாரி, அண்ணா சாலை தலைமை தபால் நிலையம், சென்னை - 600 002 என்ற பெயரில் எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை தலைமை தபால் அதிகாரி, அண்ணா சாலை தலைமை தபால் நிலையம், சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கோடை கால முகா மிற்கு பிறகு சான்றிதழ்கள் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்களை 044-28543199 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.