states

பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் சைக்கிளுக்கு மாறும் இலங்கை மக்கள்

கொழும்பு, ஜூலை 12-  மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கை யை கடைப்பிடித்த இலங்கை ஆட்சியாளர்களால் அந்நாடு கடும்  பொருளாதார நெருக்கடியில் சிக்கித்திணறுகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால்  சைக்கிள்களை பயன் படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. சைக்கிளின் தேவையும் அதிகரித்துள்ளது. இலங்கையில் பெட்ரோலின் தற்போதைய விலை ஒரு லிட்டர்  ரூ.470. ஆகவும், டீசல் ஒரு  லிட்டர் ரூ.460 ஆகவும் விற்பனை செய்யப்படு கிறது. இதனால் சைக்கிள் கடைகளில் மக்கள் குவிந்துள்ளனர். கொழும்பில் உள்ள தனியார் நிறுவன மொன்றில் மனிதவள அதிகாரியாக பணிபுரியும் லாக்லின்  கூறுகையில், தற்போதைய நிலையில் பெட்ரோல் வாங்க முடியாது. அது மட்டுமல்ல நீண்ட வரிசையில் நிற்க எனக்கு நேரமில்லை.  நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையால், நாங்கள் சைக்கிள்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம்.  வரிசையில் நின்றாலும் பெட்ரோல் கிடைக்கும் என உத்தர வாதம் இல்லை.  எனவே,  சைக்கிளை பயன் படுத்துவதே சிறந்தது. என்னிடம் இரண்டு சைக்கிள்கள் உள்ளன. ஒன்று நான் தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்துகிறேன். நான் வழக்கமாக எனது பணியிடத்திற்கு சைக்கிளில் செல்கிறேன். நான் வசிக்குமிடத்திலிருந்து 8-10 கிமீ தொலைவில் அலுவலகம் உள்ளது. நான் மட்டுமல்ல ஏராளமானோர் சைக்கிளுக்கு மாறிவருகின்றனர் என்றார்

பெட்ரோலுக்காக 5 நாட்கள் காத்திருப்பு 

கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்  ஒருவர் கூறுகையில், பெட்ரோலுக்காக நான்கு முதல் ஐந்து நாட்கள் வரிசையில் காத்திருக் கிறோம். நான் வியாழக்கிழமை இங்கு வந்தேன். ஆனால் பெட்ரோல் பங்கில்  ரூ.1500  என வரம்பு நிர்ணயித்துள்ளனர். வெறும் மூன்று லிட்டர் எனக்குப் போதாது என்றார்.  இலங்கையில் ஒரு சாதாரண சைக்கிள் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. பலர்  அதையும் போட்டிபோட்டு வாங்கிச் செல்கிறார் கள். சைக்கிளில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் சைக்கிள் தேவை அதிகரித்துள்ளது. நடுத்தர மக்க ளால் ரூ.50 ஆயிரம் விலை கொடுத்து சைக்கிள் வாங்க முடியாது என்பதால் அவர்கள் தங்களது வீடுகளில் கிடக்கும் பழைய சைக்கிள்களை தூசி தட்டி எடுத்து பழுது பார்த்து பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

ஆகஸ்டில்  சீராக வாய்ப்பு

பெட்ரோல்,  டீசல் நிரப்பப்பட்ட மூன்று கப்பல் கள் இம்மாதம் இலங்கைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஒரு கப்பல் ஜூலை 13-ஆம் தேதி அல்லது ஜூலை 15-ஆம் தேதிக்குள் வந்து சேரும். மற்றொரு கப்பல் ஜூலை 29-ஆம் தேதியோ அல்லது ஜூலை 31-ஆம் தேதியோ வரும் என  எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத் தில் இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாடு சீரடை யும் என இந்தியன்  லங்கா ஐஓசி தலைவர் தெரி வித்துள்ளார்.