கொழும்பு,பிப்.25- இலங்கையின் பொருளாதாரத் திற்கு பங்களிக்கும் வகையில் ஹம் பாந்தோட்டா துறைமுகத்தில் முத லீடுகளை அதிகரிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் அத் துறைமுகத்தை மியான்மர் துறை முகத்துடன் இணைக்கும் திட்டத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க அறிவித்துள்ளார். நாட்டின் வருமானத்தில் பிரதான பங்கு வகித்துவரும் இலங்கை சுற்றுலாத்துறையின் உட்கட்ட மைப்புகளை மேம்படுத்தி சுற்று லாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும், இலங்கையின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டா ஆகிய பகுதிகளில் சுற்றுலா வருவாயை அதிகப்படுத்திடும் வகையில் கவனம் செலுத்தி, உட்கட்டமைப்பு களுக்கான முதலீட்டை அதி கரிக்கும் நோக்கிலும் இந்த திட்டம் இருக்கும் என ஜனாதிபதி அலுவல கம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டா பகுதியில் வருவாயை அதிகரிக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அதற்கான உட்கட்ட மைப்பு விரிவாக்கத்துடன் துறை முகங்களை இணைப்பதும் முக்கிய மானது என கருதுவதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்ப டையில்தான் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை மியான்மர் துறை முகத்துடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் கூறப் பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டா துறை முகத்தில் ஏற்கனவே பெருமளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அந்நாட்டின் முக்கிய துறைமுகமாக இருப்பதாலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வ தற்கும் முதலீடுகளை அதிகரிப்பது அவசியமானது எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.