states

இலங்கையின் எதிர்பார்ப்பு 500 மில்லியன் டாலர்

வாஷிங்டன், ஏப்.24- இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சீரமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக  வங்கியிடம் இருந்து அவசரக் கடனாக சுமார் 500 மில்லியன் டாலர்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்ப தாக அந்நாட்டின் நிதியமைச்சர் அலி சப்ரி தெரி வித்துள்ளார் வாஷிங்டனில் ப்ளூம்பெர்க் தொலை காட்சிக்கு, நிதியமைச்சர் அலி சப்ரி அளித்த பேட்டியில், அமெ ரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அதிகாரிகளுடன் நிதியுதவி பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த திட்ட மிட்டுள்ளேன். நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை தேர்வு செய்ய 15 முதல் 20 நாட்கள் தேவைப்படும். இலங்கைக் கான கடன்கள் மறுசீரமைப்பிற்குத் தேவையான ஆலோ சகர்களை நியமிக்க சுமார் மூன்று வாரங்கள் தேவைப்படும்.  அடுத்த ஆறு மாதத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடம் இருந்து அவசரக் கடனாக சுமார் 500 மில்லியன் டாலர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பன்னாட்டு நிதி நிறுவனத்துடன் (ஐஎம்எப்) பேச்சு வார்த்தை நடத்தி கடன்களை ஒழுங்கான முறை யில் மறுசீரமைத்து நாட்டின் ஸ்திரத்தன்மைக்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனக் கூறி யுள்ளார்.