states

படுமோசமான ஆட்சி இதுதான்!

புதுச்சேரி, நவ. 14- புதுச்சேரியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமை அமைப்பு அரசியல் சிறப்பு மாநாட்டில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் பேசுகையில்,  “இந்த மாநாட்டில் பங்கேற்ற சிறுவர்கள் பகத்சிங், நேதாஜி, வ.உ.சி, பாரதியார், ஜான்சிராணி வேடமிட்டு வரவேற்றனர். இது பாரதியார் வாழ்ந்த புதுச்சேரியில் மதச்சார்பின்மையை உயர்த்தி பிடிக்கும் வகையில் அமைந்திருந்தது. அது மட்டுமல்ல, இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி என்பதை பறைசாற்றுவ தாக அமைந்தது” என்றார். புதுச்சேரி மாநிலம் விடுதலை பெற்று 68 ஆண்டுகளை கடந்து விட்டது. இதற்கு முன்பு இருந்த ஆட்சி களைக்காட்டிலும் படுமோசமான ஆட்சி யாக தான் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியை மக்கள் பார்க்கிறார் கள் என்றும் அவர் கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஆதரவில் இருந்தபோது   உணவு உரிமைக்கான சட்டம், 100 நாள் வேலை உறுதி சட்டம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியவை கொண்டு வந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அத்தகைய மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வருவது மார்க்சிஸ்ட்கட்சி. புதுச்சேரின் மாநில உரிமைக்காக தொடர்ந்து இனிவரும் காலங்களில் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாக அகில இந்திய  பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச் சூரி வெளியிட்ட மாநாட்டு பிரகட னத்தை  புதுச்சேரி மூத்த தலைவர்கள் தா.முருகன், க.முருகன், ஆர்.நடரா ஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மாநாட்டில்  மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதாசுந்தரராமன், வி. பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச் செல்வன், சீனுவாசன், கொளஞ்சி யப்பன், பிரபுராஜ், சத்தியா, கலிய மூர்த்தி மற்றும் இடைக்கமிட்டி  செய லாளர்கள் மதிவாணன், ராம்ஜி, அன்பு மணி, சரவணன், தமீம், ராமமூர்த்தி உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் உட்பட  திரளானோர் பங்கேற்றனர். அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரியை காமராஜர் சிலை எதிரே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங், சாவித்திரிபாய் பூலே, பாரதியார் போன்ற தலைவர்களின் வேடமணிந்த சிறுவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதோடு செந்தொண் டர்  புடைசூழ,  ஊர்வலமாக மாநாட்டு  அரங்கத்திற்கு  அழைத்து வந்தனர்.  தீர்மானம் புதுச்சேரி மாநிலத்திற்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மின்துறை தனியார்மயத்தை கைவிட வேண்டும். மூடிய ரேசன் கடைகளை திறக்க வேண்டும். தாய்மொழி கொள்கைக்கு எதிராக உள்ள தேசிய கல்விக் கொள்கையை புதுச்சேரியில் அமல்படுத்தக் கூடாது. ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தால் சாலையோர வியாபாரி களை அப்புறப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.