states

மக்கள் மனதை வெல்லும் வரை ஜம்மு - காஷ்மீரில் அமைதி ஏற்படாது..!

புதுதில்லி, மே 31- தில்லியில் உள்ள அய்வான்-இ-காலிப்  ஆடிட்டோரியத்தில், திங்களன்று இஸ்லாமிய அறிவுஜீவிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு ஆற்றிய உரை யில், டாக்டர் பரூக் அப்துல்லா மேலும் கூறி யிருப்பதாவது: “காஷ்மீரில் தினமும் மரணங்கள் நடக்கின்  றன. இங்கு மரணங்கள் நடக்காத ஒரு நாள் கூட இல்லை. ஜம்மு - காஷ்மீரின் பெரும்பகுதி ராணுவ வீரர்களால் நிரம்பியுள்ளது.  ஒன்றிய ஆட்சியாளர்கள் எவ்வளவு ராணு வத்தை வேண்டுமானாலும் கொண்டு வர லாம். ஆனால், ராணுவத்தால் எப்போதும் மக்  களின் மனதை வெல்ல முடியாது. மாறாக,  அங்கு அன்பு தேவை, நீங்கள் (ஒன்றிய அரசு) அதைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள்  மனதை வெல்லும் வரை உங்களால் ஜம்மு  - காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த முடியாது.  நாம் நமது அண்டை வீட்டாருடன் (பாகிஸ் தான்) பேசும் வரை, நாம் மகிழ்ச்சியாக இருக்க லாம் என்று மக்கள் நம்பும் வரை காஷ்மீரில்  அமைதி இருக்காது.  ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் சர்வாதிகாரத்தின் மஞ்சள் கருவிலிருந்து நாட்டை விடுவிக்கும் அவர்களின் நேசத்துக்கு ரிய கனவுக்காக சிறைவாசங்கள் மற்றும் சிர மங்களைத் தாங்கியுள்ளனர். அந்த தன்னல மற்ற நாயகர்களுக்கும், பழங்குடியினருக்கும் சொந்தமானதே காஷ்மீர்.  முஸ்லிம்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு நாட்டின் கவுரவத்திற்காக உயிரைக் கொடுத்த போதிலும் இன்று இந்தி யாவில் உள்ள முஸ்லிம்கள் சந்தேகத்துட னேயே காணப்படுகின்றனர். நாங்கள் என்ன சொல்கிறோம்? நாங்கள் இந்திய முஸ்லிம்கள், நாங்கள் சீன, ரஷ்ய மற்றும் அமெரிக்க முஸ்லிம்கள் அல்ல. எங்களை நம்புங்கள். எங்கள் மீது நம்பிக்கை வையுங்  கள் என்றே சொல்கிறோம்.   இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமானது, அதன் பன்முகத்தன்மை. நமது பன்முகத்தன்  மையே நம்மை மிகவும் தனித்துவமாக்கு கிறது. வேற்றுமையில் உள்ள ஒற்றுமையே நமது தேசத்திற்கு வலிமையைச் சேர்க்கிறது. இவ்வாறு பரூக் அப்துல்லா பேசியுள்ளார்.