states

சாலைப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த சிறப்பு குழு

சென்னை,ஏப்.8- தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெள்ளி யன்று (ஏப்.8) நடந்த கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில் வருமாறு: அப்துல்சமது மமக: மணப்பாறையில் புறவழிச்சாலை அமைக்க அரசு முன்வருமா? ஆர்.பி.உதயகுமார் அதிமுக:  தனது திருமங்கலம் தொகுதியில் கடந்த   ஆட்சியின் போது நிதிஒதுக்கி அரசாணை  வெளியிட்டும் மேம்பால பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பணி எப்போது தொடங்கும்? அமைச்சர் ஏ.வ.வேலு: மணப்பாறை புறவழிச்சாலைக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.  இதே போல் திருமங்கலம் மேம்பால  பணிகளை தொடங்குவதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். ரயில்வே, சாலை பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்துவது என்பது பிரச்சினையாக உள்ளது. வருவாய்துறை பணியாளர்கள் பல்வேறு பணிகளுக்கு மத்தியில் அதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு 5 மாவட்ட அதிகாரிகள் தலைமையில் சிறப்புகுழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.