states

img

செப்.18 முதல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்

செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி  வரை நாடாளுமன்ற சிறப்பு  கூட்டத்தொடர் புதிய நாடா ளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என்று  ஒன்றிய அரசு அறி வித்துள்ளது.  மழைக்கால கூட் டத்தொடர் அண்மை யில் தான்நடந்து முடிந்தது. சிறப்பு  கூட்டத் தொடரில் முக்கிய முடிவுகள்  எடுக்கப்படலாம் எனவும் பொது சிவில்  சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம்  எனவும் கூறப்படுகிறது. சிறப்பு கூட்டத்  தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என்று  நாடாளுமன்ற விவகாரத்தறை அமைச்  சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட் டணி, மும்பையில் கூடி ஆலோசனை நடத்தும் நேரத்தில், அவசர அவசரமாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.