states

அரசின் சிறப்பு திட்டங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள்

சென்னை,அக்.6- தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் மூலம் நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை  கண்காணிக்க மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் மாதத்தில் நான்கு நாட்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அனைத்து திட்டங்களின் பணி களையும் கண்காணிக்க வேண்டும்.ஆய்வின்போது பயனாளிகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.  ஏதாவது தவறு நடந்து இருந்தால் உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும். எந்தவித பாகுபாடும் இல்லாமல் இந்த ஆய்வுப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு தனது உத்தரவில்  சிறப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.