states

img

விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத துப்பாக்கியை கண்டுபிடித்த தென்காசி விவசாயி

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி பகுதியை சேர்ந்த சுடலை என்ற விவசாயி, விலங்குகளை விரட்ட புது விதமான துப்பாக்கி போன்ற ஒரு கருவியை உருவாக்கியுள்ளார். பிளாஸ்டிக் பைப்புகள், கேஸ் லைட்டர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தயாரித்துள்ள இந்த துப்பாக்கியில், கற்கள், காகிதம், மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய வாசனை திரவியங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி குரங்குகளை விரட்டும் முயற்சியில்  ஈடுபட்டு வருகிறார். அதிக தூரத்தில் உள்ள வனவிலங்குகளை எளிதாக விரட்ட இந்த துப்பாக்கி பயன்படுகிறது என்றும், இதனால் விலங்குகளுக்கு எந்த விதமான உயிர் ஆபத்தும் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது. விவசாயியின் இந்த முயற்சியானது அப்பகுதி மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.