states

img

தேஜஸ்வியோடு சேர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடத்திய நிதிஷ் குமார்!

பாட்னா, ஜூன் 2 - சாதிவாரி மக்கள்தொகை கணக் கெடுப்பு தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சித் தலைவர்  தேஜஸ்வியோடு கூட்டாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியது, பாஜக வட்டா ரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. சாதிவாரி மக்கள் தொகைக் கணக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் (JDU)கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறார். இதுதொடர்பாக கடந்தாண்டே பீகாரில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி களையும் இணைத்துக் கொண்டு தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நேரில் வலியுறுத்தினார்.  ஆனால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சாத்தியமற்றது; குழப்பங்கள் நிறைந்தது என்பது ஒன்றிய பாஜக அரசின் நிலைப்பாடாக உள்ளதால், அதனைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனிடையே, பீகாரில் புதனன்று மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டிய முதல்வர் நிதிஷ் குமார்,

அதன் முடிவில், பீகாரில் விரைவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.  இதுஒருபுறமிருந்தாலும், அனைத்துக் கட்சி கூட்ட முடிவை விளக்கும் வகையில், செய்தியாளர் சந்திப்பில், முதல்வர் நிதிஷ்குமார் எதிர்க் கட்சித் தலைவர் தேஜஸ்வியையும் சேர்த்துக் கொண்டதுதான் பீகாரில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.  பீகாரில் பாஜக ஆதரவுடன்தான் நிதிஷ் குமார் முதல்வராக இருந்து வரு கிறார். பாஜக-வைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத் துணைமுதல்வராக இருக் கிறார். அவரும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். அவ்வாறிருக்க, தர்கிஷோரை விட்டு விட்டு, எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யோடு நிதிஷ்குமார் காட்டிய இந்த  நெருக்கம், எப்போது வேண்டுமானா லும் ஜேடியூ - பாஜக கூட்டணி முறிய லாம் என்பதற்கான அச்சாரமாக பார்க்கப்படுகிறது. அண்மையில் தேஜஸ்வி ஏற்பாடு செய்த இப்தார் விருந்தில் நிதிஷ் குமார் முதல் நபராக கலந்து கொண்டார். அடுத்ததாக, பாஜக-வோடு நெருக்கம் காட்டி வந்த தனது கட்சியின் ஒன்றிய அமைச்சருக்கு, மாநிலங்களவை பதவி யை வழங்க முடியாது என்று பிடிவாத மாக மறுத்து விட்டார். இதன் தொடர்ச்சியாகவே பாஜக-வினருக்கு விருப்பமில்லாத சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை கையில் எடுத் திருக்கும் நிதிஷ்குமார், எதிர்க்கட்சித் தலைவரோடு சேர்ந்து செய்தியாளர் சந்திப்பையும் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள விருக்கும் பாஜக, நிதிஷ் குமாரின் இந்த நடவடிக்கையால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.