states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூரிலிருந்து மத்தியப்  பிரதேசத்தின் சியோனிக்கு சென்று கொண்டி ருந்த படல்கோட் எக்ஸ்பிரஸ் (14624) ரயிலின் இரண்டு பெட்டிகள் உத்தரப்பிரதேசம் மாநிலம் படாய் ரயில் நிலையம் அருகே தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு பெட்டி துண்டிக்கப்பட்ட நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. யாருக்கும் காயம் இல்லை.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உரு வான ஹமூன் புயல் வங்கதேசம் அருகே புதனன்று காலை கரை கடந்தது. கரை யைக் கடக்கும் பொழுது மேற்குவங்க மாநிலத்தின்  பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. புயல் கரை யைக் கடந்தாலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என்றும் மீனவர்கள் கட லுக்குச் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நிலத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவரை 8 முறை டிராக்டர் மூலம் ஏற்றிக்கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வரவிருக்கும் பண்டிகை மற்றும் குளிர் காலத்தை அடுத்து தில்லியில் காற்று தரம் மாறும் என அம்மாநில அமைச்சர் கோபால் ராய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் மூத்த பாஜக  தலைவரான கோமதி ரெட்டி ராஜகோபால்  புதனன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சுமா வலி, பிபரியா, பட்நகர், ஜாவ்ரா ஆகிய  4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாற்றி யது காங்கிரஸ் கட்சி.

தனியார் வங்கிகள் குறைந்தது 2 முழு நேர இயக்குநர்களை வைத்திருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

நடப்பு ஆண்டின் ஏப்ரல் - செப்டம்பர் மாத காலகட்டங்களில் சுங்கத்துறை சார்பில் 2 ஆயிரம் கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சரக்கு  ஆட்டோவில் புதிய வாஷிங் மிஷின் இயந்தி ரத்தில் கடத்தப்பட்ட ரூ.1.30 கோடி பறிமுதல் செய் யப்பட்டது. 6 வாஷிங் மெஷின்களில் பதுக்கி கடத்தப்பட இருந்த ரூ.1.30 கோடி பணம், 30 புதிய  செல்போன்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு எலக்டானிக்ஸ் ஷோரூமிற்கு சொந்தமானது.