states

சிவசேனாவின் 12 எம்.பி.க்களும் ஷிண்டே பக்கம் தாவல்?

மும்பை, ஜூலை 7 - சிவசேனாவின் 12 எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டி யில் இணைய காத்திருப்பதாக, ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ-வும், முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான குலாப்ராவ் பாட்டீல் கூறியுள்ளார். “சிவசேனா இழந்த பெருமைகளை ஷிண்டே தலைமையிலான அணி மீட்டெடுக்கும். சிவசேனா கட்சியின் 55 எம்எல்ஏக்களில் 40 பேர் எங்களுடன் உள்ளனா். அடுத்ததாக மொத்தமிருக்கும் 18 எம்.பி.க்களிலும் 12 போ் எங்களுடன் இணைய இருக்கின்றனா். எங்கள் அணியில் இணைய இருக்கும் எம்.பி.க்களை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசிவிட்டேன். மேலும், முன்னாள் எம்எல்ஏ-க்கள் 23 பேரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்” என்று குலாப்ராவ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.