சென்னை,செப்.19- 30 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி செப்டம்பர் 29 அன்று சென்னை யில் கோட்டை நோக்கிய பேரணியை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்துகிறது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் செப்டம்பர் 18 அன்று மது ரையில் மாநிலத் தலைவர் மூ.மணி மேகலை தலைமையில் நடை பெற்றது. கூட்ட முடிவுகள் குறித்து மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் எழுத்து மூலமாகக் கொடுத்த வாக்குறுதிகளின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். 01.06.2009 க்குப் பின்பு நியமனம் பெற்ற இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண் பாடு களைய அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவின் அறிக்கையை விரை வாகப் பெற்று ஊதிய முரண்பாடு களை வதுடன், ஒன்றிய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதி யத்தை தமிழ்நாட்டின் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயிலும் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அரசுப்பள்ளி மாணவர் களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத் திட்ட உதவிகளும், சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர் களுக்கும் வழங்க வேண்டும். புதிய மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி எண்ணும் எழுத்தும் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஆசிரி யர் நலன், மாணவர் நலன், கல்வி நலன், சமூக நலன் சார்ந்த கோரிக்கை களை முன்வைத்து தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் செப்டம்பர் 29 அன்று சென்னை யில் நடைபெறும் கோட்டை நோக்கிப் பேரணியில் பத்தாயிரம் ஆசிரியர் களைப் பங்கேற்கச் செய்திட மாநிலச் செயற்குழு முடிவு செய்துள்ளது. நவம்பர் 3 புதுதில்லியில் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசி ரியர்கள் இணைந்து நடத்தும் பேரணி யில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் சார்பில் 500 ஆசி ரியர்கள் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.