செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 14க்கு ஒத்திவைப்பு
அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து வழக்கு ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ செவ்வா யன்று வாதங்களை முன்வைத்தனர். அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா புதனன்று வாதங்களை முன்வைத்தார். இந்நிலையில் வழக்கை உயர் நீதி மன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.
ஜூலை 26 வரை நீதிமன்றக் காவல்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதனன்றுடன் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில், மேலும் 14 நாட்கள் நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தமிழர்கள் பத்திரமாக மீட்பு; அமைச்சர்
இமாச்சல பிரதேசம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற 12 கல்லூரி மாண வர்கள் அங்கு பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக தமிழ்நாட்டிற்கு திரும்ப முடியவில்லை. இதனிடையே இமாச்சலபிரதேச தலைமை காவல்துறை இயக்குநர் மூலமாக அனைத்து சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது. 12 கல்லூரி மாணவர்களும் நலமுடன் சண்டிகருக்கு வந்துள்ளதாகவும் அவர்களின் பெற்றோர் மூலம் தகவல் பெறப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செப். 15 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற அனைத்து நியாயவிலைக் கடை களிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது பயனாளர்கள் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்று உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு கருவியை சீரமைக்கவும், ஜூலை 17-க்குள் கைரேகை பதிவு கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கல்லூரி விடுதிக் கட்டடம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டா லின் புதனன்று அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் அமைச்சர்கள் உட்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கொடநாடு வழக்கில் கைப்பற்றிய பொருள் ஒப்படைப்பு
கொலை, கொள்ளை நடந்த கொடநாடு பங்களாவில் இருந்து 9 பொருட்களை சிபிசிஐடி காவல்துறையினர் கைப்பற்றி உள்ள னர். கொடநாடு பங்களாவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. ஜெயலலிதாவின் அறை, சசிகலாவின் அறை, ஸ்டோர் ரூமில் இருந்து சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு: துரைமுருகன் கடிதம்
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு திமுக சார்பில் துரைமுருகன் கடிதம் அனுப்பியுள்ளார். பொது சிவில் சட்டமே நிறைவேற்றக் கூடாது என்பதுதான் திமுகவின் தீர்க்கமான கொள்கை பிரகடனம் எனவும் அவர் தெரிவித்தார். வேற்றுமையில் ஒற்றுமை என உலக நாடுகளே வியந்து பாராட்டும் நாடு நமது இந்திய நாடு எனவும் கூறினார். பொது சிவில் சட்டத்துக்கு 22வது சட்ட ஆணையம் அனுமதி வழங்கக் கூடாது எனவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
3,010 குடியிருப்புகளை முதல்வர் திறந்துவைத்தார்
தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.358.15 கோடி செலவில் புதிதாக 3,010 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளை புதனன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சி யில் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவையில் வருமானவரித்துறை சோதனை
கோவையில் செந்தில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான அலு வலகத்திற்கு வருமானவரித்துறையினர் ஏற்கனவே வைக்கப்பட்ட சீலை அகற்றி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல ராமநாத புரம் பகுதியில் உள்ள பில்டிங் ஒப்பந்ததாரர் அருண் என்பவர் வீட்டிலும், கோவை காந்திபுரத்தில் இருக்கும் கிஸ்கால் இரும்பு கம்பி அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கிஸ்கால் இரும்பு கம்பி உரிமையாளர் கண்ணப்பன், திமுகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தக்காளி விலை சீராகும்: அமைச்சர்
10 நாட்களில் தக்காளி விலை சீராகும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறி யுள்ளார். தக்காளி விலையை சீராக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் மிதக்கும் ஹரியானா அமைச்சரின் வீடு
நாட்டின் வடமாநிலங்களில் கனமழை புரட்டியெடுத்து வரும் நிலையில், பாஜக ஆளும் மாநிலமான ஹரியானா மோசமான அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. போதுமான அளவில் வடிகால் பணிகளை சீர்செய்ததால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் சிறிய கனமழைக்கே திணறி வரும் நிலை யில், அம்பாலாவில் உள்ள உள்துறை அமைச்சர் அனில் விஜின் வீடு வெள்ளத்தில் மிதந்து வருகிறது. கடந்த செவ்வாயன்று அனில் விஜின் அலுவல் சார்ந்த பணிக்கு தனது வீட்டிலிருந்து ஒரு படகில் சென்றார்.
வீடு மாறுகிறார் ராகுல் காந்தி?
எம்.பி.யாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து தனது அதிகா ரப்பூர்வ பங்களாவை காலி செய்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தில்லியின் நிஜாமுதீன் கிழக்கில் உள்ள மறைந்த முன்னாள் (தில்லி) முதல்வர் ஷீலா தீட்சித்தின் வீட்டிற்கு குடியேற உள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.
மோடி அரசு உளவு பார்க்கிறது: ஆம் ஆத்மி
மோடி அரசு தங்களை உளவு பார்ப்பதாக சிசிடிவி கேமராவில் பதி வான வீடியோ ஒன்றை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ வில் தில்லி ஆம் ஆத்மி அலுவலகத்திற்கு வெளியே நான்கு ஆண்கள் சுற்றித் திரிகின்றனர்; மூன்று பேர் வளாகத்திற்குள் நுழைந்த பொழுது அவர்களை தில்லி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் மற்றும் பாதுகாவலர்கள் கேள்வி எழுப்பிய பொழுது சாக்குப்போக்கு சொல்லி நழுவுகின்றனர். இதனை சுட்டிக்காட்டி மோடி அரசு உளவு பார்ப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
‘ஐபிஎல் போன்று அரசியல்’
“இந்தியாவில் அரசியல் ஐபிஎல் போல மாறிவிட்டது. ஐபிஎல் போல ஒவ்வொரு வீரரும் எந்தப் பக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிவது கடினமாக உள்ளது” என மகாராஷ்டிர அரசியல் நிலவரம் குறித்து அம்மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களிலேயே முடிந்தது
சென்னை,ஜூலை 12- தீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட் புதனன்று (ஜூலை 12) தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தது. இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க ரயில் முன்பதிவு செய்வது வழக்கம். ரயில் 120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு தொடங்கும். அதன்படி தீபாவளிக்கு செல்ல நவம்பர் 9 ஆம் தேதி வியாழக் கிழமை பயணம் செய்வோருக்கான முன்பதிவு ஜூலை 12 அன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ரயில்வே கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து செய்யப் பட்டது. ரயில் நிலையங்களுக்கு வருவதை காட்டிலும் பெரும்பாலானோர் ஆப் மூலம் முன்பதிவு செய்தனர். தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி செல்லக்கூடிய விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட் விற்பனை தொடங்கிய 15 நிமிடத்திற்குள்ளாக விற்று தீர்ந்தது. அதே போல நவம்பர் 10 ஆம் தேதி பயணத்திற்கு ஜூலை 13 ஆம் தேதியும், நவம்பர் 11 ஆம் தேதி பயணத்திற்கு ஜூலை 14 ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம். வழக்க மாக இயக்கப்படும் ரயில்களில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் சிறப்பு ரயில் மற்றும் அதற்கான முன்பதிவு அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிக்னலை மீறி சென்ற கார்: ரூ.500 அபராதம் செலுத்திய நடிகர் விஜய்
சென்னை,ஜூலை 12- நடிகர் விஜய் கார் போக்குவரத்து விதிகளை மீறி சென்ற விவகாரத்தில் 500 ரூபாய் அபராத தொகையை செலுத்தியுள்ளார். கடந்த ஜூன் 17 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்க ளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய தொகுதி பொறுப் பாளர்களுக்கு பாராட்டு விழா பனை யூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ஜூலை 11 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நீலாங்கரை இல்லத்திலிருந்து பனையூருக்கு விஜய் காரில் சென்றார். அப்போது விஜய் கார் சிக்னலை மீறி சென்றதாக புகார் எழுந்தது. மேலும் போக்குவரத்து காவல்துறை சார்பில் ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான ரசீது அவருக்கு அனுப்பப்பட்டது. அந்த தொகை நடிகர் விஜய் செலுத்தியுள்ளார்.
அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளனம்: செப்.9 சென்னையில் பொன்விழா கருத்தரங்கம்
திண்டுக்கல், ஜுலை 12- அகில இந்திய சாலைப் போக்குவரத்து சம்மேளனம் ஸ்தாபிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவையொட்டி பொன்விழா சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் செப்டம்பர் 9 அன்று நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் அகில இந்திய பொதுச்செயலாளர் லாட்சுமய்யா உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றுகின்றனர். தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநில தலைவர் கே.ஆறுமுகநயினார் தலைமை வகித்தார். 1.6.1974 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சங்கம் உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டோடு சங்கம் துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. அதனையொட்டி சென்னையில் பொன்விழா சிறப்பு கருத்தரங்கம் நடத்த இக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டது. செப்டம்பர் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் அகில இந்திய பொதுச்செயலாளர் லட்சுமய்யா, முன்னாள் பொதுச்செயலாளர் கே.கே.திவாகரன், மாநில பொதுச்செயலாளர் அ.சவுந்தரராசன், மற்றும் மோட்டார் வாகனம் குறித்த கருத்தாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
‘எம்எல்ஏக்களைப் போல் நடந்து கொள்ளதெரியவில்லை’
“சட்டசபையில் கேள்விகள் கேட்பதிலோ பதில் அளிப்பதிலோ எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களுக்கு விருப்பம் இல்லை. ஆதாரமற்ற கருத்துக்களை மட்டுமே கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். புரியும்படி சொன்னால் எதிர்க்கட்சித் தலைவர்கள் எம்எல்ஏக்களைப் போல் நடந்து கொள்வதில்லை” என பீகார் சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் உருவாக்கிய கூச்சலுக்கு பதிலளித்த துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறினார்.
ம.பி.யில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை
“பெண்களாக இருந்தாலும் சரி, ஆதிவாசிகளாக இருந்தாலும் சரி, சிறுத்தைகளாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசத்தில் யாரும் பாதுகாப்பாக இல்லை” என குனோ தேசிய பூங்காவில் தேஜாஸ் என்ற சிறுத்தை இறந்தது தொடர்பாக மத்தியப் பிரதேச பாஜக அரசை முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் சாடியுள்ளார்.
‘ஐபிஎல் போன்று அரசியல்’
“இந்தியாவில் அரசியல் ஐபிஎல் போல மாறிவிட்டது. ஐபிஎல் போல ஒவ்வொரு வீரரும் எந்தப் பக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிவது கடினமாக உள்ளது” என மகாராஷ்டிர அரசியல் நிலவரம் குறித்து அம்மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
உலகச் செய்திகள்
ஜூன் 25 ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தல்களின் முடிவு களை குவாதிமாலாவின் தேர்தல் ஆணையம் அறிவிக்க லாம் என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருக்கிறது என்று ஒன்பது எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்கில்தான் இத்தகைய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
கரீபிய நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசுக்கு நடப்பாண்டில் 1 கோடி சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்ற இலக்கை எட்டிவிட முடியும் என்று அந்நாட்டு சுற்றுலாத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 53 லட்சம் பயணிகள் வந்து சென்றுள்ளனர். அந்நாட்டின் வரலாற்றில் இந்த அளவு எண்ணிக்கையில் பயணிகள் வந்தது இதுவே முதன்முறையாகும்.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் இருக்கும் தீவு நாடான மடகாஸ்கரில் புதிய ஜனாதிபதி யைத் தேர்வு செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். தற்போதைய ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கிறார் என்ற சர்ச்சை விவாதம் நடைபெறும் வேளையில் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.