வெம்பக்கோட்டை, ஜூலை 31- வெம்பக்கோட்டை அருகே உள்ளது விஜயகரிசல்குளம். இங்குள்ள மேட்டுக்காடு பகுதியில் தொன்மையான பொருட்கள் கிடைத்து வந்தன. இதையடுத்து, தமிழக அரசு, அங்கு அகழாய்வு செய்ய உத்தரவிட்டது. அங்கு நடைபெற்ற அகழாய்வில் 12-வது குழியில் சிறிய அளவிலான மண்குடங்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட தொங்கட்டான்கள், சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் சிலைகள், சிற்பவடிவில் கல்வெட்டுகள் ஆகியவை கிடைத்துள்ளன. இதுகுறித்து வல்லுநர்கள், சிற்பவடிவிலான கல்வெட்டை பார்வையிட்ட பின்பு தான் எந்த வருடத்தை சேர்ந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.