states

குஜராத் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் “சனாதன இலக்கியம்” அறிமுகம்!

காந்திநகர், ஆக. 23 - குஜராத் மாநிலத்திலுள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் ‘சனாதன இலக்கியம்’ புதிய பாடமாக சேர்க்கப்பட்டு, மாணவர்களுக்கு கற்பிக்கப்பட ஆரம்பித்திருப்பது, சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. வதோதராவில் உள்ள மகாராஜா, சாயா ஜிராவ் பல்கலைக்கழகத்தில்தான் ‘சனாதன இலக்கியம்’ என்ற பெயரில் சாதிய ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தும் வைதீக மதத் தின் கொள்கைகள் பாடமாக வைக்கப்பட்டுள் ளது. அதுவும், நவீன உலக அறிவை மாண வர்களுக்கு தரக்கூடிய ஆங்கிலத்துறையில், இந்தப்பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உபநிடதங்கள், வேதத்திற்குப் பிந்தைய ஆய்வுகளின் போதனைகளை கற்றுத்தரப் போகிறார்களாம். ‘சனாதனம் இலக்கியம்’ என்ற பெயரில் ஒரு பாடத்திட்டத்தை ஏற்படுத்தியிருப்பது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்று பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தெரி வித்துள்ளது. ‘தேசிய கல்விக்கொள்கை - 2020’ கட்ட மைப்பின் கீழ், நடப்பு கல்வியாண்டு முதல் பி.ஏ. முதலாண்டு மாணவர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பாடமாக ‘சனாதன இலக்கியம்’ இருக்கும். சுமார் 160 மாணவர்கள் இப்பா டத்தை தேர்வு செய்திருப்பதால் அவர்க ளுக்கான வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ளன.  முதல் செமஸ்டரில் உபநிடதங்கள் அடிப்படையிலான கதைகள் கற்பிக்கப்படும். இதையடுத்து படிப்படியாக பகவத் கீதை மற்றும் மத அடிப்படையிலான நூல்கள் கற் பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.