states

ஒன்றிய அரசு தலையிடாவிட்டால் ,ஜவுளித் தொழில் அழிவுப் பாதைக்கு செல்லும்

திருப்பூர், மே 6 - நூல் விலை உயர்வுப் பிரச்சனையில் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜவுளித் தொழில்  அழிவுப் பாதைக்குச் செல்லும் என்று தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) அபயக்குரல் எழுப்பியுள்ளது. நூல் விலை கடுமையாக உயர்த்தப் பட்டிருக்கும் சூழ்நிலையில் மே 5ஆம் தேதி தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தின் அசாதாரண மகாசபை கூட்டம் சங்கத் தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது. இதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழ்நாடு பின்னலாடை தொழில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அபரிமிதமான நூல் விலையால் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னலா டைத் துறையினர் தொடர் வற்புறுத்தலுக்குப் பின், ஒன்றிய அரசு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவிகித வரியை தற்காலிக மாக ரத்து செய்தது.

இதனால் ஏதாவது நிவா ரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த ஜவுளித் துறையினருக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. உலகச் சந்தையில் ஏற்கெனவே இருந்த விலையை விட 16 சதவிகிதம் உயர்த்தி விற்கின்றனர். இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்ட சமயத்தில் எம்என்சி எனப்படும் பெரும் நிறு வனங்களிடம் 25 லட்சம் பேல் பஞ்சும், சிறு வியாபாரிகளிடம் 10 லட்சம் பேல் பஞ்சும் இருப்பு இருந்தது. உள்நாட்டில் விற்பதை விட உலகச் சந்தையில் ஏற்றுமதி செய்து லாபம் அடையவே முற்படுகின்றனர்.  எனவே ஒன்றிய அரசு செப்டம்பர் 2022 வரை வெளிநாட்டு ஏற்றுமதிக்கு பஞ்சு அனுப்பு வதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என சைமா கேட்டுக் கொள்கிறது. அப்படி உள்நாட்டிலேயே விற்றாலும் கூட கையி லுள்ள இருப்பு ஓரிரு மாதங்களுக்கே போதுமா னதாக இருக்கும். பிறகு ஜவுளித் தொழில் ஸ்தம்பித்துப் போகும்.

மேலும் அக்டோபர் 2022 முதல் புதிய பருத்தி வரவை இந்திய பருத்திக் கழகம் (காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) கொள்முதல் செய்து உள்நாட்டு நூற்பாலைக ளுக்கு மட்டுமே விநியோகம் செய்யுமாறு உத்தர விட வேண்டும். உள்நாட்டுத் தேவைக்கு மேல் மிகுதியான பஞ்சை மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். இடைத்தரகர்க ளுக்கு எக்காரணம் கொண்டும் பஞ்சை விற்பனை செய்யக் கூடாது. மேற்கண்ட நடவடிக்கையை எடுக்கத் தவறி னால் ஜவுளித் தொழில் அழிவுப் பாதைக்குச் சென்றுவிடும். நாடு முழுவதும் கோடிக்க ணக்கான தொழிலாளர்கள் (இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்க ளைச் சேர்ந்தவர்கள்) வேலை வாய்ப்பை இழந்து அவர்களது சொந்த இடம் நோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். எனவே பிரதமர், சைமா தீர்மானத்தை பரிசீலனை செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.  கடந்த 70 ஆண்டுகளாக இந்திய பொரு ளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் திருப்பூர் பின்னலாடைத் தொழிலை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் கூறியிருக்கிறார்.