states

தீக்கதிர் விரைவு செய்திகள்

அரசியல் அல்ல, நாட்டில் பிசினஸ்தான் பாஜக செய்கிறது!

“மக்களின் வாழ்க்கையை சீரழிக்கவும், நாட்டில் உள்ள நமது சகோ தரர்களுக்கு இடையே வெறுப்பை பரப்பி மக்கள் விரோத கொள்கைகள் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கையை சீரழிக்கவும் பாஜக நினைக்கிறது. தில்லி யிலிருந்து பாஜக இதை செய்கிறது என்றால் தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்-ஸூம் இதைச் செய்கிறது. இந்த இரு கட்சிகளுமே ஒன்றுதான். ஒன்றாக செயல்பட்டு வருகின்றனர். இந்த இரு கட்சிகளுமே அரசியல் கட்சிகள் கிடையாது. பிசினஸ் செய்யும் கட்சிகள்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சமூகத்தில் ஆர்எஸ்எஸ் புழுக்கள் போல பரவிவிட்டது!

“நீங்கள் எப்போதாவது ஒரு கப் காப்பியை கவனித்திருக்கிறீர்களா? மேலே நுரை வருகிறது. பாஜக அப்படித்தான் இருக்கிறது. அதற்குக் கீழே ஆர்எஸ்எஸ் என்ற ஆழமான அமைப்பு உள்ளது. சமூகக் கட்டமைப்பில் ஆர்எஸ்எஸ் புழுக்கள் போலப் பரவிவிட்டது. அதைக் குறுக்கு வழிகளில் தற்போது தோற்கடிக்க முடியாது” என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். “காந்தியின் காங்கிரசுக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் மட்டுமே கோட்சேவின் சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியும்” என்பதை உணர தனக்கு நீண்ட காலம் பிடித்ததாகவும் கிஷோர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவிலும் சிபிஐ-க்கான பொது அனுமதி ரத்து

சிபிஐ புலனாய்வு அமைப்புக்கு வழங்கிய, பொது ஒத்துழைப்பை (General Consent) திரும்பப் பெறுவதாக தெலுங்கானா மாநிலம் அறிவித்துள்ளது. இதன்மூலம், சிபிஐ விசாரணைக்கு வழங்கிய ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ள மாநிலங்களின் பட்டியலில் 9-ஆவது மாநிலமாக தெலுங்கானா இணைந்துள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சித்ததாக பாஜக-வுடன் தொடர்புடைய மூன்று  பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையிலேயே, மாநிலத்தின் ஜனநாயக மாண்பைக்  குழைத்து, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற தில்லி பாஜக நினைப்பதாக குற்றம் சாட்டிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தற்போது சிபிஐ-க்கு தடை விதித்துள்ளார்.

பொதுசிவில் சட்டம்: கெஜ்ரிவால் கேள்வி

“குஜராத்தில் தேர்தலை மனதில் கொண்டு, மோசமான நோக்கத்துடன் பொதுசிவில் சட்ட அமலாக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரகண்ட் தேர்தலுக்கு முன்பும் அங்கு இதுபோல் குழு அமைக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு அக்குழு வீட்டுக்கு சென்றுவிட்டது. குஜராத்தில் அமைக்கப்படும் குழுவும்  தேர்தலுக்கு பிறகு வீட்டுக்கு திரும்பிவிடும். பாஜக ஆட்சி நடைபெறும் மத்தியப் பிர தேசத்திலோ, உத்தரப் பிரதேசத்திலோ ஏன் இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட வில்லை? பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக விரும்பினால், தேசிய அளவில்  அதனை உருவாக்கி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் அமல்படுத்தலாமே? மக்களவைத் தேர்தல் வரட்டும் என காத்திருக்கிறார்களா?” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘கும்பமேளாவை சிறப்பாக நடத்தியவர் ஆசம் கான்’

“ஆசம் கான் பாஜக அரசின் இலக்கு. தினமும் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் துன்புறுத்தப்பட்டு வருகிறார். ஆசம் கான் மதவாத சக்திகளின் தீவிர போட்டியாளராக இருப்பதாலும், ஜனநாயகம் மற்றும் சோசலிசத்தில் உறுதியாக இருப்பதாலும் பாஜக-வுக்கு அவர் கண்புரையாக தெரிகிறார். அவர் (ஆசம் கான்) அரசியல் சாசனத்திற்காகவும், மதச்சார்பின்மைக்காகவும் போரா டிய தலைவர். அவரது ஜௌஹர் பல்கலைக்கழகம் பாஜக-வால் தொடர்ந்து குறி வைக்கப்பட்டு வருகிறது. ஆசம் கான் அமைச்சராக இருந்தபோது, கும்பமேளாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்வு ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வுக் கான பாடமாகவே மாறியது, அவரது முயற்சிகள் பாராட்டப்பட்டன. இதுகுறித்து பேச வேண்டும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கூட அவரை அழைத்தது. இது பாஜகவுக்கு பிடிக்கவில்லை” என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் பேசியுள்ளார்.

பொதுசிவில் சட்டம் கட்டாயமில்லை என்றே அம்பேத்கர் கூறினார்

“பொது சிவில் சட்டம் என்பதை விருப்பத்தின் பேரில் ஏற்றுக் கொள்ள லாம், அது கட்டாயம் இல்லை என்றுதான் அரசியல் சாசன சட்டத்தை  வடிவமைத்த அம்பேத்கர் கூறினார். பாஜக-வைப் பொறுத்தவரை அது தனது இந்துத்துவ கொள்கையை உள்நோக்கமாகக் கொண்டு இந்த சட்டத்தை பயன் படுத்த நினைக்கிறது. முஸ்லிம்களுக்கு திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். இந்துக்களுக்கு கடைசி வரை இணைந்து வாழும் பந்தம். கிறிஸ்தவர்களுக்கோ திருமணம் என்பது ‘நான் திருமணம் செய்து கொண்டேன்’ என்ற அளவுதான். இவ்வாறு பன்முக கலாச்சாரம் உள்ள இந்தியாவில் சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிராக எப்படி சட்டம் இயற்ற முடியும்?” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி ஆட்சியை நோக்கி நகரும் ஆபத்து: மம்தா

“நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை அழிக்கக்கூடாது. இன்றைய நாட்களில் தேவை யற்ற துன்புறுத்தல்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரு பிரிவினரால் கொல்லப்படுகின்றன. இது தொடர்ந்தால் அது குடியரசு தலைவர் ஆட்சி வடிவத்தை நோக்கி நகரக்கூடும். அப்போது ஜனநாயகம் எங்கு நிலவும்? எனவே, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே எனது ஒரே  வேண்டுகோள்” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

மகாராஷ்டிர அரசு மீது யாருக்கும் நம்பிக்கையில்லை!

“மகாராஷ்டிராவிலுள்ள நிலையற்ற (ஏக்நாத் ஷிண்டே) அரசாங்கத்தின் மீது மாநில மக்களுக்கு மட்டுமல்ல, தொழில்துறையினருக்கும் நம்பிக்கை இல்லை. மாநிலத்திலும் அரசாங்கத்திலும் அமைதியின்மை மற்றும் ஸ்திரமின்மை உள்ளது. டாடா-ஏர்பஸ் திட்டத்தை மகாராஷ்டிராவிற்கு கொண்டு வருவோம் என்று  தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த் செப்டம்பரில் கூறினார். ஆனால் அவர் அதைச்  செய்யத் தவறிவிட்டார். இதற்காக அவர் பதவி விலகுவாரா?. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட் ஆகியோர் மகாராஷ்டிராவுக்கு வாய்ப்புகளைத் தேடி வந்தனர். ஆனால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மகாராஷ்டிர முதல்வர் எங்கும் செல்ல வில்லை. அவர் கணபதி - நவராத்திரி மண்டலங்களுக்குச் செல்வதில் மும்முரமாக இருக்கிறார்” என்று சிவசேனா முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே விமர்சித்துள்ளார்.

சனாதன சக்திகளை விரட்டுவோம்:   வைகோ அறிக்கை

சென்னை, அக்.31- மொழிவாரி மாநிலம் உருவாக்கப் பட்டதினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்துத்துவ சனாதன சக்திகளை தமிழ் மண்ணிலிருந்து துடைத்து எறிய இந்நாளில் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 1956 நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங் கள் பிரிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப் பட்டது.  சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் அடங்கிய பகுதி கள் முறையே ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுடன் இணைக்கப் பட்டன. தமிழ் மொழி பேசும் மக்களின் தாயகமாக சென்னை மாநிலம் உரு வானது. போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று இந்து ராஷ்டிரத்தை உரு வாக்கக் கூப்பாடு போடும் இந்துத் துவ சனாதன சக்திகளை தமிழ் மண்ணி லிருந்து துடைத்து எறிய இந்நாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் தெரிவித்தி ருக்கிறார்.

 ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் காவல்துறை அனுமதி

சென்னை, அக்.31- தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2 அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணி வகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி காவல்துறை தலைவர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனர். இந்த ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில் நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த செப்டம் பர் 22 அன்று  நீதிபதி ஜி.கே.இளந்திரை யன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது,அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை காரணமாக பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் நவம்பர் 6 அன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்துள் ளனர். அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக காவல்துறை தலைவர் அறி வுறுத்தியிருக்கிறார்.

அதிகரிக்கும்  அணில்கள்

கொடைக்கானல்,அக்.31- கொடைக்கானல் மலைப்பகுதி களில் மலபார் அணில்கள் எனப்படும் பறவை அணில் ஆங்காங்கே மட்டும் தென்பட்டு வந்தது. ஆனால் தற்போது மலபார் அணில்களின் எண்ணிக்கை அதி கரித்து காணப்படுகிறது. குறிப்பாக கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதிகளான வெள்ளி நீர் வீழ்ச்சி  அருவி, புலிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  மரங்களில் மலபார் அணில்கள் அதிகளவில் காணப்படு கிறது. இவை சோலை மரங்களில் இருந்து கொட்டாம்பழம், ஜாமூன் பழங் களை உண்டு வாழ்ந்து வருகின்றன. மலைச்சாலை ஓரங்களில் வனப்பகுதி யில் உள்ள மரங்களில் முகாமிடும் மலபார் அணில்களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

நவ.4 வரை பரவலாக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, அக்.31- தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:- வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரண மாக நவம்பர் 1 அன்று  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் பெரும்பகுதி இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணி ப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழையும், சென்னை, செங்கல்பட்டு திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரிய லூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 2 முதல் 4 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரை க்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளது.