திருநெல்வேலி, அக்.28- தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒன்பது குண்டு வீச்சு சம்பவங்க ளில் பாஜகவுக்கு தொடர்பு உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதா வது:- ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணி யில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் ஒன்பது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. ஒன்பது சம்பவங்களையும் நிகழ்த்தியது பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியைச் சார்ந்தவர்கள். கட்சியில் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு குண்டு வீச்சு சம்ப வத்தை நிகழ்த்தியுள்ளனர். இது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆளுநர் மாளிகை அருகே 10- ஆவதாக சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தால் அது நடக்காது. இவ்வாறு அப்பாவு கூறியுள்ளார். மேலும் விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் அனுமதி அளிக்காதது குறித்து செய்தியா ளர்கள் கேட்டதற்கு, அரைகுறை படிப்பு ஆல்வேஸ் டேஞ்சர், அதுதான் அய்யா கவர்னர்’’ என்றார்.