சிவகாசி, ஜூன் 10- சிவகாசி அருகே உள்ள வெற்றி லையூரணியில் ரூ.15 கோடி செலவில் 5 ஏக்கரில் பட்டாசு வேதி ப்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடம் மற்றும் செலவு தொகையில் ரூ.6 கோடியை பட்டாசு உற்பத்தியாளர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த மையம் அமைக்க தேவைப்படும் நிதி யில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையும், நீரி அமைப்பும் தலா நான்கரை கோடி ரூபாயை வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் நீரி அமைப்பை சேர்ந்த வர்களும், பட்டாசு உற்பத்தியா ளர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு கையெழுத் திட்டனர்.