states

தாமதமின்றி அமலாக்குக!

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு 30 வருடங்களுக்குப் பிறகு மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை. பெண்களின் அரசியல் பணிகளை தடுத்து வந்த கண்ணாடி கூரை உடைத்தெறியப்பட்டுள்ளது. மக்களவையின் பலத்தில் 15 சதவீதம் மட்டுமே நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் இருப்பதால் அரசியல் பிரதிநிதித்துவத்தில் நிலவும் சமத்துவமின்மை அப்பட்டமாகவும் கவலை அளிப்பதாகவும் உள்ளது.  128 வது அரசியலமைப்புச் சட்ட திருத்தம் அல்லது ‘நாரி சக்தி வந்தன் ஆதினியம்’ மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கிட வழிவகை புரிகிறது. 15 காலாண்டு காலம் வரை இது அமலில் இருக்கும். அதற்குப் பிறகும் அது நீட்டிக்கப் படலாம். ஆனால் தொகுதி மறுசீரமைப்பு  மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டுடன் அது பிணைக்கப்பட்டுள்ளதால் அதை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படும். பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கொள்கைக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதிகளின் எல்லைக்கும், சட்டமன்ற அல்லது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

எனவே எல்லை மறு வரையறையுடன் இதனை பிணைப்பது துரதிர்ஷ்டவசமானது. இதனால் 2024 பொதுத்தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு கிடைக்காது. பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் இந்த மசோதா வரையறுக்கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கு உள் ஒதுக்கீட்டை சில எதிர்க்கட்சிகள் கோருகின்றன. இதை, நடைமுறைப்படுத்துவதை தாமதப்படுத்தும் சூழ்ச்சியாக பயன்படுத்தக் கூடாது. மேலும் இந்த முன்மொழிவுகள் சட்டமாக மாறும்பொழுது பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான வெற்று அடையாளப் பூர்வமானது இது அல்ல என்பதையும் உறுதி செய்ய வேண்டும். பல மாநிலங்களில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் பெண்களின் பங்கு 50% இருப்பதால் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன என்பதும் உண்மைதான். வீட்டில் உள்ள ஆணாதிக்க மனப்பான்மையில் துவங்கி பணியாற்றும் இடங்களில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படாதது வரை அடிமட்டத்தில் உள்ள பெண்கள் எல்லாவித தடைகளையும் உடைத்து எரிந்துள்ளனர் என்ற படிப்பினையையும் உள்வாங்க வேண்டும். ஆரம்பத்திலேயே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கிய நாடு இந்தியா. ஆனால் சிறந்த அரசியல் பிரதிநிதித்துவத்தை அவர்கள் பெறுவதை உறுதி செய்வதில் தடுமாறக்கூடாது.