states

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கான தடை நீக்கம்

சென்னை,அக்.14- சென்னை உயர் நீதிமன்ற வழக்கறி ஞர் சங்கத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கங்களில் ஒன்றாக உயர் நீதிமன்ற வழக்கறி ஞர்கள் சங்கம் உள்ளது. 150 ஆண்டு கள் பழமை வாய்ந்த இந்த சங்கத்தில் சுமார் 17,000 வழக்கறிஞர்கள் உறுப்பி னர்களாக உள்ளனர் . இந்த சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும். கடந்த 2018 ஆம் ஆண்டு அடுத்த தேர்த லுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் சத்தியபால் உள்ளி ட்டோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், “விதிகளை மீறி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தடை விதிக்க வேண்டும்” என கோரியி ருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தேர்தலில் போட்டியிடுவதற்கு புதிய தகுதி களையும் அறிவித்தது. அதன்படி 5  ஆண்டுகளில் 200 வழக்குகள் நடத்தி யவர்கள்தான் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் என்பது உள்ளிட்ட விதிகளை உருவாக்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த உத்தரவை சீராய்வு செய்யக் கோரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தி ருந்தனர். இந்த வழக்கில் வெள்ளி யன்று(அக்.14) தீர்ப்பளித்த நீதி பதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகி யோர் அடங்கிய அமர்வு தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினர். மேலும், ஏற்கெனவே இருந்த சங்கங்களின் சட்ட விதிகள் படியே தேர்தலை நடத்தலாம் என்றும் தீர்ப்பளித்தனர்.