states

நேபாள விமான விபத்து: 14 பேரின் உடல்கள் மீட்பு

காத்மாண்டு, மே 30-  நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவிலிருந்து 22 பேருடன் ஞாயிறன்று காலை  தாரா ஏர் என்ற விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமானது.  விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகளும் 3 விமான ஊழி யர்கள் உட்பட மொத்தம் 22 பேர்  பயணித்தனர். இந்த விமா னத்தை தேடும் பணி நடை பெற்று வந்த நிலையில், மாய மான விமானம் மஸ்டங் பகுதியில் உள்ள மலையில் மோதி நொறுங்கியதாக தெரி விக்கப்பட்டது. கோவாங்க் கிராமத்தில் உள்ள லாம்சே நதிக்கரை அருகே இருந்த மலைப்பகுதி யில் விமானம் விழுந்து நொறு ங்கியுள்ளதாக, உள்ளூர்வாசி கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தில் 22 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.  விபத்தில் சிக்கிய இந்தியர்கள், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த வர்கள். விமான விபத்தில் உயிரி ழந்தவர்களில் 14 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப் பட்டுள்ளது.