சென்னை,செப்.2- இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பா டுகள், 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கான சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த மாதாந்திர சீராய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவில்க ளில் உலோகத் திருமேனிகளை பாதுகாத்திடும் வகையில் பாதுகாப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 1,833 உலோகத் திருமேனி பாது காப்பறைகள் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டு 1,737 பாதுகாப்பறைகள் கட்டிட பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 139 பணிகள் நிறைவுற்றுள்ளன. 927 பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமப்புற கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களுக்கு திருப் பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 2,500 கிராமப்புற கோவில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி பொறுப்பேற்றபின் 925 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. செப்டம்பர் 3 ஆம் தேதி 38 கோவில்களிலும், செப்டம்பர் 4 ஆம் தேதி 13 கோவில்களிலும் குட முழுக்கு நடைபெற உள்ளது. கோவில்களுக்குச் சொந்தமான ரூ.5,169 கோடி மதிப்பீட்டிலான 5721 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.