திருவள்ளூர், ஜூன் 17- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு வருகிற ஆகஸ்டு 13,14 ஆகிய தேதிகளில் திருவள்ளூரில் நடைபெறுகிறது. இம்மாநாட்டை சிறப்பாக நடத்திட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வாழும் 36 வகையான பழங்குடி இன மக்களுக்கு ஒப்பற்ற அமைப்பாக கடந்த 30 ஆண்டுக ளாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. லட்சக் கணக்கான பழங்குடி இன மக்களின் உரிமைகள், அடிப்படை தேவைகளை பெற்று தரும் வலுவான அமைப்பாக வும் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைவாழ் பெண்கள் பாதிக்கப்பட்ட பிரச்சனைகள் தொடங்கி, பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக தொடர் போராட்டத்தின் விளைவாக பாதுகாப்பு அளித்து வருகிறது. ஒன்றிய அரசின் பழங்குடியினருக்கான சிறப்பு துணைத் திட்டத்தின் நிதியையும், மாநில அரசின் நிதியினையும் முழுமை யாக பழங்குடி இன மக்களுக்கே செல விட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களின் காலியாக உள்ள பணி யிடங்களை நிரப்ப வேண்டும், விண்ணப் பித்த 15 நாட்களில் இனச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற அரசு ஆணையை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 9 வது மாநில மாநாடு ஆகஸ்ட் 13,14 ஆகிய இரண்டு நாட்கள் திருவள்ளூரில் நடைபெறு கிறது.
இம் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்த, ஆர்.தமிழ்அரசு தலைமை யில் வரவேற்பு குழு அமைப்புக் கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. வர வேற்புக் குழுத் தலைவராக திருவள்ளூர் நகர மன்ற முன்னாள் தலைவர் ப.சுந்தரராசன், செயலாளராக மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆர்.தமிழ்அரசு, பொருளாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிதிக்குழு அமைப்பாளராக ஜி.சம்பத், உணவு குழுவுக்கு கே.ராஜேந் திரன், பி.துளசிநாராயணன், விளம்பரம் மற்றும் வலைதளக் குழுக்களுக்கு எஸ்.செந்தில்குமார், தொண்டர் குழுவுக்கு எஸ்.கலையரசன் அமைப் பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், விவசாய தொழிலாளர் சங்க த்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ், வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ்.கலையர சன், தமிழ்நாடு வேட்டைக்காரன் முன்னேற்ற பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதரன், தமுஎகச தலைவர் எஸ்.செந்தில்குமார், ஆட்டோ சங்க நிர்வாகி சீனிவாசன், விவசாயிகள் சங்க நிர்வாகி விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.