சென்னை, ஜூலை 25- மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தி இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை தங்கசாலை பேருந்து நிலையம் அருகே செவ்வாயன்று (ஜூலை 25) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர் களை சந்திக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து 2 மணி நேரத்தில் வீடு திரும்பினார். அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு தில்லியில் இருந்து சென்னை வந்துள்ளார். உடனே காலை யில் 10 மணிக்கு பாலன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். தூக்கமின்மை மற்றும் ஓய்வு இல்லாமையால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.