சென்னை, ஜன.24- மோடி குறித்து பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படத்திற்கு இந்தியாவில் ஒன்றிய பாஜக அரசு தடை விதித்துள்ளது.இதற்கு எதிராக குரலெ ழுப்புமாறு கருத்துரிமையாளர்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பிபிசி நிறுவனம் சில தினங்களுக்கு முன் “இந்தியா: மோடிக்கான கேள்விகள்” என்கிற ஆவணப்படத்தின் முதல்பகுதியை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்குள் வெளியிடப் படாத இப்படத்தை இணையவழியில் கண்டவர் கள், பிறரும் காண்பதற்கான இணைப்புச்சுட்டி களை டிவிட்டர் மற்றும் யூ டியூப் வழியே பகிர்ந்தி ருந்தனர். இந்நிலையில், இந்திய ஒன்றிய அரசு ‘அவசரநிலைக் காலத்தில் தகவல்களைத் தடுப்ப தற்கான தகவல் தொழில்நுட்பச்சட்டம் 2021 பிரிவு 16’ வழங்கியுள்ள அதிகாரத்தை ஏவி, படத்தைப் பார்ப்பதற்கான இணையச்சுட்டிகளை நீக்குமாறு டிவிட்டர், யூ டியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு, நீக்கச் செய்துள்ளது.
ஆவணப்படத்தை வெளியிடும் முன்பாக தங்க ளுக்குக் கிடைத்த தகவல்கள் குறித்து இந்திய அரசின் கருத்தையறிந்து அதையும் படத்தில் சேர்க்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று பிபிசி தெரிவித்துள்ளது. படம் என்னென்ன வகையில் உள்நாட்டு அமைதிக்கும் பாதுகாப்புக் கும் ஊறு விளைவிக்கிறது அல்லது படத்தில் கூறப்படும் செய்திகளில் எவை பொய்யானவை என்று பதிலளிக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டு “இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு மீது காலனிய மன நிலையிலிருந்து தொடுக்கப்பட்ட அவதூறு பிரச்சாரம்” என்று கூறி படத்தை தடுத்துள்ளதானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதும் மக்க ளின் கருத்தறியும் உரிமையின் மீதும் தொடுக்கப் பட்ட தாக்குதல் என்று தமுஎகச கண்டிக்கிறது. மனிதவள மேம்பாடு, கோவிட் பாதிப்பு, பட்டினி, சுற்றுச்சூழல் மேலாண்மை, ஊடகச் சுதந்திரம் ஆகியவை தொடர்பாக வெளியான உலகளாவிய மதிப்பீட்டறிக்கைகளை மேற்குலகின் சதி என்று சொல்லிவிட்டு தப்பிக்கப் பார்த்த அதே உத்தியை இவ்விசயத்திலும் ஒன்றிய அரசு கையாள்கிறது.
“குஜராத்தில் 2002ஆம் ஆண்டு இஸ்லாமி யர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை மற்றும் கொலைகளைத் தடுக்க அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடி தவறிவிட்டார் என்பதை விடவும் இந்த சட்டவிரோதச் செயல்க ளுக்கு அவர் உடந்தையாக இருந்தார்; கலவரத்தைத் தடுக்க வேண்டிய காவல்துறை யினரையும் அரசு நிர்வாகத்தையும் அவர் தனது அதிகாரத்தால் முடக்கிப்போட்டு கலவரக்காரர்கள் சுதந்திரமாக வெறியாட்டம்போட அனுமதித்தார்” என்றும் பல்வேறு ஆதாரங்களுடன் இப்படம் முன் வைக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பிரிட்டன் அரசு நடத்திய விசாரணை, பிரிட்டன் அரசின் ரகசிய ஆவ ணங்கள், உண்மையை வெளிப்படுத்திய அப்போ தைய குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியாவின் மர்மச்சாவு, சிறையில் அடைக் கப்பட்ட காவல் அதிகாரிகள் என படம் தொட்டுக் காட்டும் விசயங்கள், நம் காலத்தின் இந்த மிகக் கொடிய இன அழிப்பை அதற்குள்ளாக மறந்து விட்டுத்தான் இந்தியாவின் பிரதமராக மோடியை தேர்ந்தெடுத்திருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகின்றன. சிறப்பு புலனாய்வுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மோடி குற்றமற்றவர் என்கிற தீர்ப்பை உச்சநீதிமன்றத்திலிருந்து பெற்றுக் கொண்டதனாலேயே அதுபற்றி மீண்டும் விவாதிப்பது நாட்டின் நீதித்துறையை இழிவுபடுத்து வதாக ஆகிவிடாது. அதேபோல, கடந்தகாலத்தில் அரசியல் சாசனப்பொறுப்புகளை மோடி நிறை வேற்றிய விதம் பற்றி கேள்வியெழுப்புவதால் தேசத்தின் நன்மதிப்புக்கு எவ்வகையிலும் குந்தகம் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே, பிபிசி ஆவ ணப்படம் தொடர்பாக ஒன்றிய அரசு விதித்துள்ள தடையை உடனே நீக்க வேண்டும் என்று குர லெழுப்புமாறு கருத்துரிமையில் பற்றுகொண் டுள்ள யாவரையும் தமுஎகச மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.