இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியிருப்ப தாவது: ஆளுநர் ரவி நீட் விலக்கு மசோ தாவிற்கு ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் எனக் கூறியது கண்டனத் திற்குரியது. ஆளுநர் ஆர்.என்.ரவி வகிக்கும் பொறுப்பு உயரிய பொறுப்பு. அந்த பொறுப்புக்கு மேலும் பொறுப்பு சேர்க்கும் வகையில் ஆளுநர் செயல்பட வில்லை. அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப் பின் பிரதிநிதியாக, பா.ஜ.க வின் மிகச் சிறந்த தொண்டராக செயல்படுகிறார். அவர் ஆர்.எஸ்.எஸ் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு சர்ச்சைக் குரிய கருத்துக்களை கூறுவது தவறானது. நீட் விலக்கு தீர்மானம் என்பது சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னம். இது தி.மு.க உள்ளிட்ட பிற கட்சி யின் பிரச்சனை அல்ல மாறாக இது பொது பிரச்சனை. நாட்டிலேயே மிகச்சிறந்த மருத்துவர்களும், அதிக மருத்துவக் கல்லூரிகளும் இருப்பது தமிழ்நாட்டில் தான். இங்கு பணியிலிருக்கும் சிறந்த மருத்துவர்கள் யாரும் நீட் தேர்வை எழுத வில்லை. உலக நாடுகளிலிருந்தும், இந்தி யாவின் பிற மாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெற தமிழ்நாட்டிற்குத் தான் வருகிறார்கள். நீட் தேர்வால் தான் தகுதியானவர் களை தேர்ந்தெடுக்க முடியும் என்பது அப்பட்டமான பொய், திசை திருப்பும் நட வடிக்கை தான். நீட் தேர்வு மூலம் பயன் பெறுவது கோச்சிங் செண்டர்கள் தான். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோ தாவின் மீது ஆளுநருக்கு மாற்று கருத்து இருக்குமேயானால் அது குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதலாம் அல்லது முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசலாம். ஆனால் மசோதாவிற்கு கை யெழுத்து போட மாட்டேன் என்கிற அதி காரத்தை அவருக்கு வழங்கியது யார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை ஆளுநர் நடத்தி வருகிறார். இது வன்மையாக கண் டிக்கத்தக்கது.