states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு இன்று துவங்குகிறது

எல்ஐசி-யை தனியார்மயமாக்குவதன் முதல்படியாக, அதன் 3.5 சதவிகித பங்குகளை தனி யாருக்கு விற்கும் நடவடிக்கை (பொதுப்பங்கு வெளியீடு - IPO) புதன்கிழமையன்று துவங்கு கிறது. பங்கு ஒன்று 902 ரூபாய் முதல் 949 வரையிலான விலையில், மொத்தம் 22 கோடியே 30 லட்சம் எல்ஐசி பங்குகள் புதனன்று விற்பனைக்கு வருகின்றன. ஒருவர் குறைந்த பட்சம் 15 பங்கு கள் என்ற அளவில் இந்த பங்கு வெளியீட்டில் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் ரூ. 21 ஆயி ரத்து 257 கோடியைத் திரட்ட மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக எல்ஐசி ஊழியர்கள் நாடு தழுவிய வெளிநடப்பு வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி, கனிம வளங்கள் நிறைந்த ராஞ்சியின் அங்காரா பிளாக்கில் 0.88 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்குப் பெற்றதாகக் கூறப்படுகிறது. சட்டப் பிரிவு 9ஏ-இன் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அரசு சார்ந்த ஒப்பந்தத்தை எடுத்தால் அல்லது அரசு சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். எனவே, இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, இந்திய தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருமண விழாவில் பங்கேற்பது எப்போது குற்றமானது?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. இதனைச் சுட்டிக் காட்டி, “முழு நேர சுற்றுலாப்பயணி, பகுதி நேர அரசியல்வாதி. பாசாங்குத்தனம் நிறைந்த வர்” என்று ஒன்றிய பாஜக அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, “நமது நட்பு நாடான நேபாளத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அவரது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பது நமது கலாச்சாரங்களில் ஒன்றாகும். இது நமது நாட்டில் குற்றம் ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளது.

ஒன்றிய அரசை எதிர்த்து அஞ்சாமல் போராடுவோம்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செவ்வாயன்று கொல்கத்தாவின் செஞ்சாலையில் ரம்ஜான் ‘ஈத்-உல்-பிதர்’ பிராத்தனையில் பங்கேற்றார். பின்னர், அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய அவர், ‘நாட்டின் நிலைமை தற்போது சரியாக இல்லை. தனிமைப்படுத்தும்  அரசியலை வரவேற்க முடியாது. நீங்கள் அனைவரும் பயப்படாமல் எதிர்த்துப் போராட வேண்டும். நாம் இணைந்தால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் ஆலோசகராக தருண் கபூர் நியமனம்!

பெட்ரோலியத்துறை செயலாளர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வுபெற்றவர் தருண் கபூர். இவர் தற்போது பிரதமர் மோடியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1987ஆம் ஆண்டு இமாச்சலப்பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான தருண் கபூர், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர் ஆவார். அவருக்கு இந்த புதிய பதவியின் மூலம் ஒன்றிய அரசுத் துறை செயலாளருக்கு இணையான அந்தஸ்து மற்றும் சம்பளம் வழங்கப்படும் என ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பாஜக அமைச்சர் விழாவில் ஓடிய ஆபாசப் படம்!

அசாம் மாநிலம், டின்சுகியாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் மெத்த னால் கலந்த எம்-15 பெட்ரோலை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி பங்கேற்று, ‘எம்-15’ பெட்ரோலின் பைலட் வெளியீட்டை நடத்திக் கொண்டிருந்த போது, மேடையில் அமைக்கப்பட்டிருந்த புரொஜெக்டர் திரையில், சில மணித்துளிகள் திடீரென ஆபாசப் படம் ஓடியுள்ளது. இதைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் புரொஜெக்டர் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உ.பி.யில் செவிலியர் பாலியல் வன்கொலை!

உ.பி. மாநிலம், உன்னாவ் மாவட்டம், பங்கர்மாவ் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யில் 18 வயது செவிலியர், கடந்த சனிக்கிழமையன்று வேலைக்கு சேர்ந்தார். அதற்கு மறு நாள் மாலை மருத்துவமனையின் வெளிப்புற சுவரில் அந்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். முதலில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த இளம்பெண் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனி எது நடந்தாலும் அதற்கு நான் பொறுப்பில்லை!

மகாராஷ்டிராவில் ரம்ஜான் பண்டிகையான மே 3-ஆம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு, பாஜக-வுக்கு அடியாள் வேலைபார்க்கும் மகாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஏற்கெனவே மிரட்டல் விடுத்திருந்தார். இதனிடையே, அவுரங்காபாத்தில் திங்களன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசாங்கம், மே 3-ஆம் தேதிக்குள் ஒலி பெருக்கிகளை அகற்றத் தவறினால், அதன் பிறகு மாநிலத்தில் என்ன நடந்தா லும், அதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன்” என்று மீண்டும் பயமுறுத்தியுள்ளார்.

3 மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேரள மாநிலம் திரிகாகரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பி.டி.தாமஸ், ஒடிசா மாநிலம் பிரஜ்ராஜ்நகர் தொகுதி பிஜூ ஜனதா தளம் எம்எல்ஏ கிஷோர் குமார் மொஹந்தி ஆகியோர் காலமாகினர். உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் தொகுதி பாஜக எம்எல்ஏ கைலாஷ் கதோரி அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்த 3 தொகுதிகளுக்கும் மே 31-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மகாராஷ்டிரா: வெயிலுக்கு இதுவரை 25 பேர் பலி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெயிலின் தாக்கத்திற்கு அதிகபட்சமாக 19 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பின் 6 ஆண்டுகள் கழித்து நடப்பு 2022-ஆம் ஆண்டில் 25 பேர் உயி ரிழந்து உள்ளனர். இதில், அதிகபட்சமாக நாக்பூரில் 11 பேர், அவுரங்காபாத்தில் 5 பேர், நாசிக்கில் 4 என உயிரிழந்துள்ளனர். 

கேரளாவிற்கும் வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

தில்லி, பஞ்சாப் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, இமாச்சல பிரதேசம், குஜராத் மாநிலங்களை குறி வைத்திருக்கும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்ததாக கேரள மாநி லத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். எர்ணாகுளம் மாவட்டத்தை மையமாக கொண்டு, ‘அரசி யலற்ற அரசியல்’ என்ற மையவாத அரசியல் நடத்திவரும் ‘டுவென்டி டுவென்டி’ கட்சியுடன் கூட்டணி அமைக்கும் அவர், எர்ணாகுளத்தில் மே 15-ஆம் தேதி டுவென்டி, டுவென்டி கட்சியின் மாநாட்டிலும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.