states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இந்திய மாணவர்களை தங்கள் நாட்டிற்கு திரும்ப அனுமதிக்க சீனா தயாராக உள்ளது என்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ரயில்வேயில் தொலைத் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரயில்வே அமைச்சகமும், சி-டாட் நிறுவனமும் புரிந் துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

குழந்தைகள் இணை யத்திற்கு  அடிமையா வதை தடுக்க அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் மனநல நிபுணர் குழு  மூலம் சிறப்பு ஆலோச னை வழங்கும் சேவை தொடங்கப்பட்டிருப்ப தாக தமிழக அரசு தெரி வித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு முழு வதும் வாங்கியதை விட இரு மடங்கு அதிகமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியுள்ளது.

ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் கட்டப்படும்  அனைத்து கட்டுமானங்களு க்கும்  சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம் என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. சுற்றுச்சூழல் விதிகள் ஆரோவில்லை கட்டுப்படுத்தாது என்ற ஆரோ வில் நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசின் வாதம் நிராகரிக்கப் பட்டது.

சென்னையை அடுத்த சோழி ங்கநல்லூரில் 70  கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கட்டப் படவுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வு த்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் கூறி யுள்ளார்.

நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் ஊடுரு வலை தகர்க்கவும், பாது காப்பை பலப்படுத்தும் வகை யில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய எம்ஐ-17வி5 வகை  ஹெலிகாப்டர்களில், இஸ்ரே லின் நவீன டேங்கர் எதிர்ப்பு ஏவுகணைகளை சேர்க்க இந்திய விமானப் படை திட்ட மிட்டுள்ளது.

பனை பொருட்களை சந்தைப் படுத்தும் பொருட்டு, 10  மாவட்ட ஆட்சியர் அலுவல கங்களில் பனைப் பொருள் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும் என்று கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார்.