புதுதில்லி, மே 3 - தமிழர்களை தமிழில் பேச விடுங்கள்.. அவர்கள் மீது எதற்காக இந்தியைத் திணிக்கி றீர்கள்? என்று பிரபல பாடகர் சோனு நிகாம் கேள்வி எழுப்பியுள்ளார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், தெலுங்கு நடிகர் கிச்சா சுதீப் உடனான டுவிட்டர் உரையாடலின் போது, இந்தியே தேசிய மொழி என்று கூறியது, நாடு முழு வதும் விவாதங்களை ஏற்படுத்தியது. திரைத் துறை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலை வர்கள் பலரும் அஜய் தேவ்கானுக்கு கண்ட னங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், பீஸ்ட் ஸ்டுடியோவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரி யுமான சுஷாந்த் மேத்தாவுடனான உரையா டலின் போது, பிரபல பாடகர் சோனு நிகாம் கூறியிருப்பதாவது: நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்றாலும், இந்தி மொழி பேசாத மக்கள் மீது அந்த மொழியை திணிக்க முடியாது; ஏனெ னில், நானறிந்தவரை, அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய மொழி என்று இந்தி மொழி யை யாரும் குறிப்பிடவில்லை.
இதுகுறித்து நிபுணர்களுடனும் கலந்தா லோசித்தேன். நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்பது எனக்குப் புரிகிறது. அதே சமயம் உலகத்தின் மூத்த மொழி தமிழ் என்பதை நாம் அறிவோமா? உலகின் பழமை யான மொழி எது என்று சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் இடையே விவாதம் நடந்து வரு கிறது. உலகிலேயே தமிழ்தான் மிகப் பழமை யான மொழி என்று மக்கள் சொல்கிறார்கள். அப்படியிருக்க, தமிழர்கள் ஏன் இந்தியில் பேச வேண்டும்? அவரவர் விரும்பும் மொழியை பேச மக்க ளுக்கு உரிமை இருக்க வேண்டும். பிறர் மீது மொழியைத் திணித்து நாட்டில் நல்லி ணக்கத்தை சிதைக்க முயற்சிக்கக் கூடாது. 32 மொழிகளில் பாடியிருக்கும் நான், ஒரு விமான பயணத்தின் போது, இந்தியில் பேசி னேன். அதற்கு விமானப் பணிப்பெண் தனக்கு ஆங்கிலத்தில்தான் பதிலளித்தார். நமது நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் ஆங்கி லத்தில்தான் உள்ளன. ஏற்கெனவே பல உள்நாட்டு பிரச்சனை களை சந்தித்து வரும் இந்திய நாட்டில் மொழிச் சர்ச்சை தேவையற்ற பதற்றத் தையே உருவாக்கும். இவ்வாறு சோனு நிகாம் பேசியுள்ளார்.