சென்னை,ஜூலை 19- பெற்றோர் இல்லாமல் கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி உடற்கூறாய்வு நடைபெற்றது. முன்னதாக இந்த மருத்துவக் குழுவில், தங்கள் தரப்பு மருத்துவரை உடனிருக்க அனுமதிக்க கோரி உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மற்றும் மறு உடற்கூறாய்வுக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியிடம் மாணவி யின் தந்தை தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை நீதிபதி கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து, மாணவியின் தந்தை தரப்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் செவ்வாயன்று (ஜூலை 19) முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் மறு உடற்கூறாய்வை நிறுத்திவைக்க மறுத்துவிட்டது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள மாணவியின் வீட்டில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் சார்பில், ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மாணவியின் உடல் மறு உடற்கூறாய்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்த நிலையில் தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் முன் முறையீடு செய்யப்பட்டது. அரசுத் தரப்பில், மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு மறு உடற்கூறாய்வு செய்ய தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த முறை யீட்டை கேட்ட நீதிபதி, உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் விதிக்காத தால் பெற்றோர் இல்லாமல் மறு உடற்கூறாய்வு நடைமுறையை தொடங்கலாம் என வாய்மொழியாக அறிவுறுத்தினார். மேலும், பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
சிறையில் அடைப்பு
இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட ஐந்து பேரையும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி இரண்டாம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி உத்தரவிட்டார். மேலும், உயிரிழந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்ட 113 பேரை திருச்சி மத்திய சிறை யில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.