புதுச்சேரி, ஜூலை 30 புதுச்சேரி தியாகிகளுக்கு சிஐடியு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் பட்டது. 8 மணி நேர வேலை உரிமை கேட்டு பிரென்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, 1936 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று போராடிய 12 பஞ்சாலை தொழிலாளர்களை புதுச் சேரியை ஆண்ட பிரெஞ்ச் அரசு ஈவிரக்க மின்றி சுட்டுத் தள்ளியது. அத்தகைய தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 தியாகிகள் தினம் புதுச்சேரியில் அனுசரிக்கப்பட்டு வரு கிறது. புதுச்சேரி கடலூர் சாலையில் அமைந் துள்ள 87 ஆம் ஆண்டு தியாகிகள் நினைவு சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிஐடியு புதுச்சேரி மாநில செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார்.சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், சிஐடியு நிர்வாகிகள் பிரபுராஜ்,கலியமூர்த்தி,வடிவேலு, கொளஞ் சியப்பன் ரவிச்சந்திரன், பச்சைமுத்து, மதி வாணன், மணிபாலன்,மது மற்றும் மூத்த பஞ்சாலை தொழிலாளர்கள் குணசேகரன், ராமகிருஷ்ணன்,சுப்பிரமணியன்,ராமலிங்கம்,உட்பட திரளானோர் பங்கேற்று தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக சுதேசி பஞ்சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து தியாகிகள் சிலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.