சென்னை, மே 25- தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டி யல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதை யடுத்து உயர்கல்விக்கு சேருவதற்கு மாணவர்கள் கல்லூரிகளில் விண்ண ப்பித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூ ரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முத லாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 8முதல் 22 ஆம் தேதி வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாண வர்கள் விண்ணப்பித்த நிலையில் அதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. https://collegeportal.tngasa.in என்ற இணையதளத்தில் தர வரிசைப் பட்டியலை கல்லூரி முதல் வர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.