சென்னை, மார்ச் 4- ஹிஜாவு நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், அந்நிறு வனத்துக்கு எதிராக நேற்று திடீர் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் ‘ஹிஜாவு அசோசியேட்ஸ்’ என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல் பட்டு வந்தது. இந்த நிறுவனம் மலேசியா வில் எண்ணெய் கிணறு வைத்திருப்பதா கவும், அந்த தொழிலில் கிடைக்கும் வருமானம் மூலம் தமிழ்நாட்டில் பிற தொழில்களில் ஈடுபட்டு வருவதாக வும், தங்களிடம் முதலீடு செய்தால் மாதம் 15 விழுக்காடு வட்டி தருவதாக வும் விளம்பரம் செய்தது. இந்நிறுவ னத்துக்கு 5 கிளை நிறுவனங்களும் இருந்தன. இந்த வாக்குறுதிகளை நம்பி ஹிஜாவு மற்றும் அதன் கிளை நிறுவன ங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ரூ.800 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால், அந்த நிறுவனம் உறுதியளித்தபடி வட்டி கொடுக்கவில்லை. கட்டிய பணத்தை யும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தது. இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக அந்நிறுவனம் மற்றும் அதன் தொடர்பு டைய 32 இடங்களில் சோதனை நடத் தப்பட்டு முக்கிய ஆவணங்கள் பறி முதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஹிஜாவு நிறுவன இயக்குநர்கள், நிர்வா கிகள் என 6 பேர் கைது செய்யப் பட்டனர். அந்நிறுவன தலைவர் சவுந்தர ராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதற்கிடையே, இந்நிறுவன நிர்வா கிகளில் ஒருவரான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நேரு (47) கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பல மாவட்டங் களைச் சேர்ந்த 100 பேர், ஹிஜாவு நிறுவனத் தில் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் எனக் கூறி சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலு வலகம் அருகே திடீர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.