கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணன் நினைவாக, விஜயா வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி, அவரது மனைவி சாந்தி துரைசாமி ஆகியோர், மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை-க்கு ரூ.5 லட்சம் விருதுத் தொகையாக வழங்கினர். தமிழ்நாடு முழுவதும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களம் காணும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு ஒரு லட்சம் ரூபாயை எஸ்.வி.ராஜதுரை, அமைப்பின் மாநில துணைத் தலைவர் யு.கே.சிவஞானத்திடம் வழங்கினார். இதில் அமைப்பின் கோவை மாவட்டச் செயலாளர் இரா.ஆறுச்சாமி, வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.