சென்னை, ஜூன் 1- கோடை விடுமுறையில் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு நடத்துவதாக அறிவிக்கப் பட்டுள்ள “எண்ணும் எழுத்தும்” பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பள்ளிக் கல்வித் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:- கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட் டுள்ளது. வரும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி 23 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான கோடை விடுமுறை அளவைவிட குறைவான நாட்களாகும். 2021-22ஆம் கல்வியாண்டில் கொரோனா பெருந்தொற்றின் காரண மாக மாணவர்கள் தாமதமாகப் பள்ளி களுக்கு வருகை புரிந்தாலும், ஆசிரி யர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்கள் 220 நாட்களைத் தாண்டி யுள்ளது.
இது வழக்கமான ஆண்டின் வேலை நாட்களை விடக் கூடுதலாகும். இந்தச்சூழலில் 2021-22ஆம் கல்வியாண்டில் அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாட்களி லும் ஜூன் 1, 2 ஆகிய இரு நாட்கள் ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சிக்கான கருத்தாளர் பயிற்சியும், 1 முதல் 3ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சியும் தமிழ்நாடு முழுவதும் வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத் துள்ளது. இவ்வாறு கோடை விடுமுறையில் அளிக்கப்படும் பயிற்சி மாநிலம் முழு வதும் உள்ள தொடக்கக்கல்வி ஆசிரியர் கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோடைவிடுமுறை யில் இதுபோன்ற பயிற்சிகள் இதற்கு முன்பு வழங்கப்பட்டதில்லை. மேலும், பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் கோடை விடுமுறையைத் துய்க்கும் பிரிவினரா வர். இதனாலேயே அரசு ஊழியர்க ளுக்கு வழங்கப்படுவது போல் ஆசிரியர் களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. 15 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. எனவே, இக்கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாட்களையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையாக ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி அமைந்துள்ளது. எனவே, பள்ளிக்கல்வித்துறை கோடை விடு முறையில் நடத்தும் ‘எண்ணும் எழுத் தும்’ பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.