சென்னை,ஜூலை 17- இன்று நடைபெறும் குடியரசு தலைவர் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களிப்பார் என திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரி வித்துள்ளார். 15ஆவது குடியரசு தலைவர் பதவி க்கான தேர்தல் திங்களன்று (ஜூலை 18) நடைபெறுகிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணா மூல் காங்கிரஸ் உட்பட எதிர்க் கட்சிகள் சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களம் இறக்கப்பட்டுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 30ஆம் தேதி சென்னை வந்த யஷ்வந்த் சின்கா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடு தலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீன் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கோரி னார். குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டில் 234 எம்.எல்.ஏ.,க்க ளும், 39 மக்களவை எம்.பி.,க்களும், 18 மாநி லங்களவை எம்.பி.,க்களும் வாக்க ளிக்க உள்ளனர். அவர்களில் எம்.எல். ஏ.,க்களைத் தவிர்த்து எம்.பி.,க்கள் தில்லியில் தங்களது வாக்குகளைச் செலுத்த உள்ளனர். இதனிடையே, வாக்குப் பதிவு தினத்தில் வாக்கா ளர்களாக உள்ள எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் வாக்களிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட தரு ணத்தில் நாடு முழுவதும் நடந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தல்களின்போது கொரோனா நோய்த் தொற்று பாதித்த வாக்காளர்கள் தங்களது வாக்கு களைச் செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வாக்காளர்கள் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து வாக்குச் சாவடிக்கு வர அனுமதிக்கப்பட்டனர். இதுபோன்றே குடியரசுத் தலைவர் தேர்தலிலும் கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் பாது காப்பு கவச உடை அணிந்து வந்து வாக்களிக்கலாம் என்று சட்டப் பேரவைச் செயலக அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், திங்களன்று (ஜூலை 18) நடைபெறும் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் முறை குறித்து விவரிக்க திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஞாயி றன்று (ஜூலை 17) சென்னை தேனாம் பேட்டை அண்ணா அறிவாலயத் திலுள்ள கலைஞர் அரங்கில் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தி யாளர்களை சந்தித்த திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “ குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் முறை குறித்து சட்டப்பேரவை உறுப்பி னர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த தேர்தலில் முதல் வாக்கு ஒருவ ருக்கும், இரண்டாவது வாக்கு ஒருவ ருக்கும் கொடுக்கலாம் என்ற விதி இரு க்கிறது.
சரியான முறையில் எப்படி வாக்களிக்க வேண்டும் என விளக்கி கூறினோம். தலைமை செயலகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு நாளை மீண்டும் விளக்கப்படும். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தலில் வாக்களிப்பார்” என தெரிவித்தார். குடியரசு தலைவர் தேர்தலில் ஒவ் வொரு மாநிலத்தையும் பொறுத்து எம்எல்ஏக்களின்வாக்குமதிப்பு மாறுபடும். மாநிலங்களவை எம்பி, மக்களவை எம்.பிக்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு 700, தமிழ்நாட்டில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176. அதன் அடிப்படையில், 133 எம்எல்ஏக்கள் மற்றும் 34 எம்பிகளை கொண்ட திமுகவிற்கு மட்டும் 47, 208 வாக்குகள் உள்ளது குறிப்பி டத்தக்கது.