states

மருத்துவ சங்கங்களுடன் பேச்சுக்கு தயார்: அமைச்சர்

சென்னை,ஜூன் 28- திமுக ஆட்சியின்போது முதலமைச்சர் கலைஞரால் வெளியிடப்பட்ட அரசாணை 354 நிறைவேற்றிட வேண்டும், 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அரசு  மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு உள்ளிட்ட பல்வேறு மருத்து சங்கங்கள் ஜூன் 29 அன்று மேட்டூரில் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறது.  இந்த நிலையில் செய்தியாளர் களை சந்தித்த மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,“ஒரு சில  மருத்துவ சங்கங்கள் போராட் டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. அரசுக்கும் மருத்துவ சங்கங்களுக்கும் இடையேயான பிரச்சினை இது  கிடையாது. மருத்துவ சங்கங்க ளுக்குள் நடைபெறும் பிரச்சினை  இது. 4000-க்கும் மேற்பட்டவர்க ளுக்கு எம்.ஆர்.பி மூலம் பணி வழங்கவுள்ளோம்” என்றார்.

;