states

காலரா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: மா. சுப்பிரமணியன்

சென்னை,ஜூலை 5- காரைக்காலை சுற்றியுள்ள உள்ள பகுதிக ளில் காலரா பரவாமல் தடுக்க முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “காரைக்காலில் 39 பேருக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால்  நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும்  பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரை நேரடியாக அங்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அங்குள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து பயன்படுத்துக்கின்ற தண்ணீரிலிருக்கின்ற குளோரின் அளவை கண்டறிதல் மற்றம் அவர்களுக்கு யாருக்கா வது இதுபோன்ற பாதிப்பு அதாவது வயிற்றுப்போக்கோ அல்லது வாந்தி போன்ற  உபாதைகள் ஏற்படும்போது பொதுவெளி யில் போகக்கூடாது எனவும் கழிப்பறையில் மட்டுமே போக வேண்டும் என்று அறிவுறுத்த  ப்பட்டிருக்கிறார்கள்” என்றார். அதேபோல், சுற்றுப்புற கிராமங்களி லும் மருத்துவமனைகளில் இந்த வயிற்றுப்போக்குக்கும், வாந்திக்கும் தேவை யான மருந்து மாத்திரைகள் முழுமையாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த சொல்லியிருக்கிறோம். அவர்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சொல்லியிருக்கிறோம் என்றும் அமைச்சர் கூறினார். காய்ச்சிய தண்ணீரையே பருக வேண்டும் என்றும் உண்ணுகின்ற உணவை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும் என்று  அறிவுறுத்தியிருக்கிறோம். இப்படி வருமுன்  காப்போம் என்கிற வகையில் நம்முடைய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.