சென்னை, ஆக.30- நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கடந்த 23 ஆம் தேதி நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் தரையிறங்கிய ரோவர் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியைக் உலகின் பல்வேறு நாடுகளும் பாராட்டி வரு கின்றன. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து, ரோவர் பத்திரமாக தரையிறங்கியது. ரோவர் பிரிந்து நிலவை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு புதிய அப்டேட் களையும் இஸ்ரோ அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம் இருப்பது ரோவர் உறுதி செய்து ள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதி விட்டுள்ள இஸ்ரோ, நிலவின் தென்துருவ மேற்பரப்பில் கந்தகம், அலுமினியம், கால்சியம், சல்ஃபர், இரும்பு, குரோமி யம், சிலிக்கான், டைட்டானியம், மாங்கனீஸ் மற்றும் ஆக்ஸி ஜன் இருப்பதை ரோவர் உறுதி செய்துள்ளது. லேசர் ஸ்பெக்ட் ரோஸ்கோப் கருவி மூலம் பிரக்யான் ரோவர் நிலவில் உள்ள தனிமங்களை கண்டறிந்ததாக இஸ்ரோ தகவல் தெரி வித்துள்ளது.