சென்னை, செப்.13- அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி (ஞாயிறு) போகி பண்டிகை தொடங்கி, 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதனன்று ( செப்.13) ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. 120 நாட்களுக்கு முன்பாகவே பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு டிக்கெட் மையங்களில் புதனன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்பு ஏராளமானோர் மையங்களில் திரண்டிருந்தனர். மையங்கள் திறக்கப்பட்டவுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதேபோல் இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பெரும்பாலானோர் இணையதளங் களில் முன்பதிவு செய்தனர். டிக்கெட் கவுண்டர்களில் குறிப்பிடத்தக்க வகையில் கூட்டம் இருந்தது. பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இரண்டாம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்றன. குறிப்பாக தென்மாவட்ட ரயில்கள், கோவை மார்க்கமாக செல்லும் ரயில்க ளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. நெல்லை, அனந்தபுரி உள்ளிட்ட ரயில் களில் 2-ம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் விற்று முடிந்தது. ஏ.சி. வகுப்பு டிக்கெட் மட்டும் சில இருந்தன. ஜனவரி 12 ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை