சென்னை,பிப்.21- வேங்கைவயல் கொடூர சம்பவம் நடந்து 60 நாட்களை கடந்த நிலையி லும் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமல் விசாரணை என்கிற பெயரால் தலித் மக்களைத் துன்புறுத் தும் காவல்துறையை கண்டித்து மார்ச் 3 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருச்சியில் கண்டன இயக்கம் நடத்துகிறது. இதுகுறித்து முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டம், வேங் கைவயல் தலித் மக்கள் பயன்படுத் தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழி வைக் கொட்டிய கொடூர வன்கொடு மைக்கு நீதி கேட்டு உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற ஜனநாயக இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில் வழக்கு விசார ணையை மேற்கொண்டு வரும் சிபிசி ஐடி காவல்துறை, வேங்கைவயல் தலித் மக்களையே விசாரணை என்ற பெய ரால் துன்புறுத்துகிற செய்தி தினம் தினம் வெளிவந்து கொண்டிருக்கிறது. குற்றம் நிகழ்ந்து ஏறக்குறைய 60 நாட்களை நெருங்கும் நிலையிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. சிபிசிஐடி காவல்துறை மனிதக் கழிவு கலந் துள்ள நீரைக் குடித்த குடும்பத்தினர் களையே குற்றவாளி போல் தினசரி விசாரித்து வருவது விநோதமாக உள்ளது. எனவே, வேங்கைவயல் தலித் மக்களை விசாரணை என்ற பெயரால் துன்புறுத்துவதைக் கண்டித்தும் உண்மைக் குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்யக் கோரியும் மார்ச் 3 அன்று திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.