states

தேசிய சின்னத்தை திறந்த பிரதமர்: அரசியல் சட்ட விதிமீறல்

புதுதில்லி, ஜூலை 11 - புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரை மீது 6.5 மீட்டர் உயர முள்ள தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று திறந்து வைத்துள்ளார். நாடாளுமன்ற கட்டி டத்தின் மீது தேசிய சின்னத்தை அமைத்து பிரதமர் திறந்து வைத் திருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முற்றிலும் மீறியிருக்கும் செயல் ஆகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது தேசிய சின்னத்தை பிரதமர்  திறந்து வைத்திருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மிகத் தெளிவாக மீறியிருக்கும் செயலே ஆகும். நமது அரசியல் அமைப்புச் சட்டமானது, நமது ஜனநாயகத்தின் 3 தூண்களான - நிர்வாகம் (அர சாங்கம்), நாடாளுமன்ற அமைப்பு (நாடாளுமன்றம், மாநில சட்ட மன்றங்கள்) மற்றும் நீதித்துறை ஆகியவற்றை மிகத்தெளிவான முறையில் தனித்தனியாக பிரித்து வைத்திருக்கிறது. குடியரசுத் தலை வர் நாடாளுமன்றத்தை நடத்த அழைப்பு விடுப்பார். அரசு நிர்வா கத்தின் தலைவராக பிரதமர் இருப் பார். நாடாளுமன்ற அமைப்பானது சுயேட்சையான பல பங்களிப்பு களை ஆற்றக் கூடியதாக இருக்கும்;  அவற்றில், சட்டங்களை இயற்றுவது,

அரசு நிர்வாகத்தை நாட்டு மக்க ளுக்கு பணியாற்ற கடமைப்பட்ட தாகவும் பதில் சொல்ல கடமைப்பட்ட தாகவும் வைத்திருப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை நாடாளுமன்ற அமைப்பு மேற்கொள்ளும். இந்த மூன்று தூண்களுக்கு இடையிலான அரசியலமைப்புச் சட்ட ரீதியிலான அதிகாரப் பிரிவினை என்பது தற்போது அரசு நிர்வாகத்தின் தலைவரால் மீறப்பட்டுள்ளது; குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.  அதுமட்டுமல்ல, மேற்கண்ட நிகழ்வின்போது பிரதமர் பூஜை  நடவடிக்கைகளையும் மேற்கொண்டி ருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, அனைத்து இந்தியர் களுக்கும், அவரவர் நம்பிக்கை அடிப்படையிலான மத நடவடிக்கை களை பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் உரிமையும் பாதுகாப்பும் அளித்திருக்கிறது. இது எந்த விதத்திலும் பிரிக்க முடியாத உரிமை  ஆகும். அதேவேளையில் இந்திய அர சியலமைப்புச் சட்டமானது, அரசு  நிர்வாகம் எந்தவிதத்திலும் எந்தவொரு நம்பிக்கையையோ, மதத்தையோ பின்பற்றவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ கூடாது என்பதை மிகத் தெளிவான முறையில் வரையறை செய்திருக்கிறது.  எனவே பிரதமரும் ஒன்றிய அர சாங்கமும், அவர்கள் பதவிப்பிர மாணம் எடுத்துக் கொண்ட போது உறுதியேற்றுக் கொண்ட அடிப் படையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை பாது காக்கவும் உறுதிசெய்யவும் எவ்வித  சமரசமும் இல்லாமல் அமலாக்கவும் வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு வலியுறுத்துகிறது.   (ஐஎன்என்)