பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது
பெட்ரோல், டீசல் விற்பனையில் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் இதற்குத் தீர்வு காண உதவு மாறும் பெட்ரோல் சில்லறை விற்பனையாளர் கூட்டமைப்பினர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி யுள்ளனர். இதனால் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயரப்போகிறது. ஜூன் 19-ஆம் தேதி நில வரப்படி, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 113.1 டாலராக இருந்தது. சில நாட்களுக்கு முன்பு பேரலுக்கு 120 டாலராக அதிகரித்துள்ளது. இதனால் தங்களுக்கு பெரும் தொகை இழப்பு ஏற்படுவதாக தனியார் பெட்ரோல் விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: போலீசாரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை
சென்னை. ஜூன் 19- சென்னையில் விசாரணை கைதி ராஜ சேகர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரி கள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, கொடுங்கையூர் காவல் நிலை யத்திற்கு கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அப்பு என்ற ராஜசேகர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கின் விசார ணை அதிகாரியாக டி.எஸ்.பி. சசிதரனை நிய மனம் செய்து சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. உத்தர விட்டார். இதன்படி சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சசிதரன் தலைமையிலான அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீ சாரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி.-பிளஸ்2 தேர்வு முடிவு: இன்று காலை வெளியாகிறது
சென்னை, ஜூன் 19- எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கள் திங்கட்கிழமை (ஜூன் 20) வெளியாகிறது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளையும், நண்பகல் 12 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவு களையும் வெளியிடுகிறார். பள்ளிக்கூடங்கள் மற்றும் பொது நூலகங்கள் வாயி லாகவும் தேர்வு முடிவு களை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் www.dge.tn.gov.in,www.dgel.tn.gov.in,www.dge2.tn.gov.in,www.tnresults.nic.in ஆகிய தேர்வுத்துறை, இணைய தளங்களில் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளை செல்போனுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புள்ளிமான் மீட்பு
கல்பாக்கம், ஜூன் 19- கல்பாக்கம் புதுப்பட்டி நம் பக்கிங்காம் பகுதி தைல மர காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த புள்ளிமான் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வந்தது. இதனை கண்ட 5-க்கும் மேற்பட்ட நாய்கள் புள்ளி மானை விரட்டி விரட்டி கடித்தன. இதில் பலத்த காயம் அடைந்த மான் உயிருக்கு போராடியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் நாய்களிடம் இருந்து மானை காப்பாற்றினர்.