மதுரை, மே 14- தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாய மில்லை என்று வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் தெரி வித்துள்ளது. வங்கிகளில் எழுத்தர் (கிளர்க்) பணிகளுக்கு மாநில அலுவல் மொழி கட்டாயமில்லை என வங்கிப் பணியா ளர் தேர்வு நிறுவனமான ஐபிபிஎஸ் (IBPS) அறிவித்தி ருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் பணியாற்ற 843 பணி யாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில், சுமார் 400 பேர் வெளி மாநிலத்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியின் தொழிலாளர் நலசங்க பொதுச் செயலாளர் ஜி.கருணாநிதி, ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் 20 முதல் 30 விழுக்காடு வெளிமாநி லத்தவர்களே பணியமர்த்தப்பட்டு வந்ததாகவும், தற்போது, இந்த எண்ணிக்கை 50 விழுக்காடாக அதிகரித் துள்ளாதாகவும் கூறினார். 2022-23ஆம் ஆண்டுக்கான பணியாளர் தேர்வு பட்டி யலில் 50 விழுக்காடுக்கு மேல், தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர்களே இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப் பிட்டார். இதுதொடர்பாக இந்திய வங்கிகளின் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் கிராமப்புறங் களில் உள்ள வங்கிகளில் பணியாற்றுவதால், வாடிக்கை யாளர்கள் வங்கிச் சேவை பெறுவதில் பாதிப்பு ஏற்படு வதும், தமிழ் பணியாளர்களிடம் செல்லுமாறு அவர்கள் கைகாட்டி விடுவதும் வாடிக்கையாகியுள்ளது. தமிழ் தெரியாமல் பணியில் சேரும் வெளிமாநி லத்தைச் சேர்ந்தவர்கள் மாநில மொழியை கற்றுக் கொள்ள மூன்று மாத அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதற்குள் தமிழ் கற்றுக்கொள்ளாதவர்களை தகுதி நீக்கம் செய்யாமல், கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.