சென்னை, ஜூன் 26- சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல் வாத்தை கைது செய்துள்ள குஜராத் அரசுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் பேரா அருணன் மற்றும் க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் மதக்கல வரம் தூண்டப்பட்டு பல நூறு பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு அன்று அந்த மாநில முதல்வராக இருந்த மோடிக்கு சம்பந்தம் ஏதுமில்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு கூறியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை அது தள்ளுபடி செய்தது ஆச்சரியத்தை தருகிறது. இந்தத் தீர்ப்பு அரசு பயங்கர வாதத்திற்கு எதிராக பொதுமக்கள் நீதி மன்றத்தை நாடுவதை தடுப்பதாக உள்ளது. இந்தத் தீர்ப்பை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றிருப்பது கவனிக்கத் தக்கது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து குஜராத் படுகொலைகளின் சூத்ரதாரிகளை நீதி மன்றத்தின் முன் நிறுத்தப் போராடிய டீஸ்டா செதல்வாத்தின் வீட்டுக்குள் வலுக்கட்டாய மாக நுழைந்து அவரைத் தாக்கி, கைது செய்து, காவலில் வைத்துள்ளது குஜ ராத்தின் பயங்கரவாத தடுப்பு போலீஸ். பயங்கரவாதத்தை எதிர்த்தவரை பயங்கர வாத தடுப்பு போலீஸ் கைது செய்துள்ள விசித்திரம் அரங்கேறியுள்ளது. இதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மை யாகக் கண்டிக்கிறது; அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்து கிறது. இந்த விவகாரத்தில் குஜராத்தின் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளான ஆர்.பி.ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோரை பொய் யான சாட்சியங்களை தந்து சதி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது குஜராத்தின் பாஜக அரசு போலீஸ். இது நியாயமாக நடந்து கொள்கிற போலீஸ் அதிகாரிகளை மிரட்டு கிற வேலை. காவல்துறையை பாஜகவின் ஏவல் துறையாக மாற்றுகிற இந்த அநியா யத்தை மக்கள் ஒற்றுமை மேடை கண்டிக்கி றது. குஜராத்தில் நடந்த படுகொலைகளுக்கு எதிராக நீதி கேட்டுப் போராடுகிறவர்களையே குற்றவாளிகளாக்கும் இந்த வெட்கக்கேடான முயற்சியை கைவிட வேண்டும். இந்த நியா யமான கோரிக்கைக்கு ஆதரவாக மனித நேயர்கள் அனைவரும் தங்கள் வலுவான குரலை எழுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.