கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் அண்ணல் மகாத்மா காந்திஜியின் இலக்கை நிறைவேற்றுவது ஆர்வமூட்டும் நிகழ்வு.
1933ஆம் ஆண்டில் 41 ஹரிஜன வைணவர்கள் (மாதிகா என்னும் காலணி தைப்பவர்கள்) சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றனர். பிறகு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அறங்காவலர்கள் மற்றும் மேற்பார்வை குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களித்தனர். அவர்களுக்கு இந்த உரிமையை பெற்றுத் தந்தவர் தோழர் பி. ஆர் என அழைக்கப்படும் பி ராமமூர்த்தி அவர்கள்
பஜனைப்பாடகர்கள் குழுவை உருவாக்குதல்!
மார்கழி மாதத்தில் சென்னை பெரம்பூரி லிருந்து ஹரிஜன பஜனை பாடகர்கள் குழுவை அழைத்து வந்து நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பாடியபடி பார்த்தசாரதி கோவிலைச் சுற்றிவர ஏற்பாடு செய்தார் பி. ராமமூர்த்தி. கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாததால் பஜனை பாடிவிட்டு அவர்கள் கலைந்து செல்வார்கள். ஒருநாள் ஓய்வு பெற்ற நீதிபதி பாஷ்யம் ஐயங்காரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார் பி. ஆர். இந்த நிகழ்ச்சியால் மிகவும் அவர் ஈர்க்கப்பட்டார் .கோவிலுக்குள் சென்று அவர்களுக்கு பிரசாதம் கொண்டு வந்து விநியோகம் செய்தார்.ஆனால் வைணவ பிரா மணர்களில் ஒரு பிரிவினர் கோப மடைந்தனர். ராமமூர்த்திக்கு ஏற்கனவே ஒரு கால் உடைந்துவிட்டது. மற்றொரு காலையும் உடைக்க வேண்டும் என்று சாம்பகேச ஐயங்கார் ஆத்திரப்பட்டார். இந்நிலையில் பார்த்தசாரதி கோவிலில் தர்மகர்த்தா குழுவை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வந்தது. திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே உள்ள சார்ஜன்ட் காலனி யில் உள்ள காலணிகள் தைக்கும் தொழி லாளர்களை திரட்டி தேர்தலில் அவர்களை யும் பங்கேற்க செய்ய தயார்ப்படுத்தினார் பி.ஆர். வாக்காளர்கள் தென்கலை வைணவ இந்துக்களாகவும்,21 வயதுக்கு மேற்பட்ட வர்களாகவும்,கோவிலின் எல்லைக்குள் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே இரண்டு கைகளிலும் அவர் களுக்கு சங்கு சக்கரத்தை பதிவிட்டு சமாஸ் ரயணம் செய்து சில ஸ்லோகங்களையும் கற்றுக் கொடுத்தார்.பின்னர் அவர்களை வாக்காளர்களாகவும் பதிவு செய்தார். இதனைக் கண்டு பொறுக்காத சில வைணவர்கள் தேர்தலுக்கு தடை உத்தரவு பெற்றனர். அதை எதிர்த்து நகர சிவில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏற்பாடுகள் செய்தார் பி .ஆர். மேலும் இந்த மேல்முறையீட்டு நீதி மன்றத்தில் நீதிபதி.யு. ராமப்பாவின் கேள்வி களுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று அந்த ஆதிதிராவிடர் சமூக வாக்காளர் களுக்கு பயிற்சியும் அளித்தார்.
அவர்களும் வாக்களிக்கலாம்!
அந்த மக்களும் தங்களின் வைணவ அடையாளங்களை நீதிபதியிடம் காட்டினர். சாதனி ஐயங்கார் தான் தங்களின் குரு என்றும் எடுத்துரைத்தனர்.இந்த பதில்களால் நீதிபதி திருப்தி அடைந்ததோடு வாக்காளர் களாக அவர்களை பதிவு செய்யவும் அனு மதித்தார். “விஷ்ணுவையோ அல்லது சிவனையோ நம்புபவர்கள் இந்துக்கள் தான்.தீண்டத்தகா தவர்களாக கருதப்படும் அவர்களது கௌர வம் கவனிக்கத்தகுந்தது. ஆனாலும் தீண்டத் தகாதவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல என்பதை நீதிமன்றம் ஏற்கவில்லை.அவர்கள் இந்துக் கடவுளை வழிபட்டனர். தீண்டத்தகாதவர்கள் என்றாலும் அனை வரும் இந்துக்கள் என்பதே அவருடைய கருத்தாக இருந்தது” என அந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி தி இந்து - ஜனவரி 1935இல் செய்தி வெளியானது. சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் இருந்த போது உயர்நீதிமன்றத்திற்கு அதை மாற்றக் கோரி நீதிபதி ரமேசிடம் கோவில் வாரியம் விண்ணப்பித்தது. தேர்த லுக்கு தடை உத்தரவு வழங்கவும் மீண்டும் சிவில் நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றிடவும் வேண்டிக் கொண்டது.
வாரியத்தின் ஆணவம்!
காலணி தயாரிக்கும் தொழிலாளர் களுக்கு கோவிலுக்குள் நுழைய எவ்வித உரிமையும் இல்லாததால் அவர்களை விலக்கி வைத்தது சரியே எனவும் வாரியம் வாதிட்டது. தென்கலை பிரிவைச் சார்ந்த வைணவ பிரிவினர் என்பது நான்கு பிரதான சாதி யினருக்கு மட்டுமே பொருந்தும்; அதற்கு வெளியே உள்ள பிற சாதிகளுக்கு பொருந்தாது என வாரியம் நீதிமன்றத்தில் வாதிட்ட செய்தியையும் 1935 ஜனவரியில் வெளியான ‘தி இந்து’ நினைவுகூர்ந்தது.
தனி வாக்குப் பெட்டிகள்
ஆனாலும் நீதிபதி ரமேஷ் தேர்தலை நிறுத்திட தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று தீர்ப்பு அளித்தார். 41 ஆதிதிராவிட வாக்காளர்களுக்கும் உரிய இடத்தில் வாக்களிக்க அனுமதித்து தேர்தலை நடத்தலாம் எனவும் உத்தரவிட்டார். அதனை ஏற்று திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆதிதிராவிடர்கள் வாக்களித்தனர். இந்தச் சம்பவம் தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. சுத்திகரிப்பு தேவையில்லை: காந்திஜி பின்பு ஒரு நாள்,காந்திஜி சென்னைக்கு விஜயம் செய்தார்.
ஆதிதிராவிட மக்களை ஒரு வித சமஸ்காரம் சுத்திகரிப்பு விழா செய்த பிறகு கோவிலுக்குள் நுழைய அனு மதிக்கலாமா என்பது குறித்து அவருடைய கருத்தை அறிய பாஷ்யம் ஐயங்கார் விரும்பினார். நான் அப்படி நினைக்கவில்லை என காந்திஜி பதில் அளித்தார். மற்ற இந்துக்களுக்கு பொருந்தக்கூடிய அனைத்து விதிகளும் அவர்களும் கடைபிடிக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு சமஸ்காரம் எதுவும் விதிக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. தூய்மை விதிகளை கடைபிடிக்க வேண்டும்; மாட்டு இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும் என அவர்களிடம் தான் எப்போதுமே கூறி இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த செய்தி யும் வெளியானது. ஹரிஜன சேவா சங்கத்தில் ஓரிரு வருடங்கள் பணியாற்றிய பிறகு, அதன்மூலம் மட்டும் ஆதிதிராவிடர்களின் நிலைமைகளை மேம்படுத்தவோ சமூக தளைகளில் இருந்து அவர்களை விடுவிக்கவோ முடியாது என்பதை உணர்ந்ததாக பி.ராமமூர்த்தி தமது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார். இதனை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் இணைந்தார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சுவருக்கு அருகில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லக்கூடாது என்று இருந்த அந்த நிலையை உடைப்பதே அந்த மக்களுக்கு செய்யும் மிக முக்கியமான சேவையாக இருக்கும் என பி.ஆர்.கருதினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சோப்பும் எண் ணெய்யும் கொடுத்து கோவிலுக்குள் அனு மதிக்க வேண்டும் என்று வெறும் பிரச்சாரம் மட்டும் செய்தால் போதாது; இருக்கும் சட்டங்களை தீவிரமாக பயன்படுத்தி எளிய மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுப்பதே சரியான பாதை என்பதை இந்தியாவிற்கே இந்த வழக்கின் மூலம் உணர்த்தியவர் தோழர் பி.ஆர்.
இந்து (ஆங்கிலம்) 14.10.23 ஏட்டில் பி.கோலப்பன் எழுதிய கட்டுரை
- தமிழில்: கடலூர் சுகுமாரன்